விருதுநகர் மாவட்டம் – சிவகாசி - ஆனைக்குட்டம் - சுக்கிரவார்பட்டியில் இயங்கிவரும் ஸ்ரீபதி பேப்பர் மில்லில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனே, இரண்டு வாகனங்களில் விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
வெளியே குவிக்கப்பட்டிருந்த கழிவுகளில் தீ பிடித்ததால், உயிர்சேதம் எதுவும் இல்லை. இயந்திரங்கள் போன்றவற்றுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.