திடீரென்று புகைமண்டலமான சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்...! விரைந்த தீயணைப்பு வாகனங்கள் (படங்கள்)

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் அதற்கு சொந்தமான காலி இடம் இருக்கிறது. இதில் இன்று மதியம் 3.30 மணி அளவில் திடீரென்று தீ பரவ ஆரம்பித்து அந்த இடம் முழுக்க புகை மண்டலமாக ஆனது. இந்த இடத்தில் காய்ந்த புல்வெளி இருந்துள்ளது என்பதும் அது தான் தற்போது தீ பிடித்து எரிகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்திற்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்து வருகிறது. மேலும் இதுதொடர்பாக விசாரித்தபோது சிலர் வெயிலின் காரணமாக தீ பற்றியது என்றும் மேலும் சிலர் சமூக விரோதிகள் தீ வைத்திருக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.

bus stand fire koyambedu
இதையும் படியுங்கள்
Subscribe