Finger Pulse Oximeter instruments highly imorted order by tn cm palanisamy

Advertisment

பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவியை கூடுதலாக பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் உத்தரவு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா சிகிச்சைக்கு கூடுதலாக 43,000 (Finger Pulse Oximeter) கருவி கொள்முதல் செய்ய முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதில் 23,000 (Finger Pulse Oximeter) கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள கருவிகள் ஒரு சில தினங்களில் வாங்கப்படும். தேவையின் அடிப்படையில் கூடுதலாகவும் (Finger Pulse Oximeter) கருவிகள் கொள்முதல் செய்யப்படும். " இவ்வாறு அமைச்சர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை அளவிட கருவி பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.