Skip to main content

கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்ற நிறுவனங்களுக்கு அபராதம் 

Published on 22/02/2018 | Edited on 22/02/2018
fine

 

ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையைவிட, கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்த 21 நிறுவனங்கள் உட்பட, பொட்டலப் பொருள் விதிகள் பின்பற்றாத மொத்தம் 56 நிறுவனங்கள் மீது ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை அபராத நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

 

இந்த  மாதத்தில் ஈரோடு மாவட்ட  நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கடைகள், நகரங்களில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள கடைகளில் சட்டமுறை எடையளவு விதிகளின் படி கீழ் ஈரோடு மாவட்ட தொழிலாளர் நல அதிகாரிகள் ஈரோடு, பவானி,  பெருந்துறை, கோபி மற்றும் சத்தி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆய்வில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றாத 23 நிறுவனங்கள்,  பொட்டலங்களில் குறிப்புகள் குறிக்கப்படாமல் விற்பனை செய்த 12 நிறுவனங்கள்,  அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 21 நிறுவனங்கள் என 56 நிறுவனங்கள் மீது அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு அபராதம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
High Court order on Karnataka Chief Minister Siddaramaiah fined

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றது. அந்த ஆட்சியின் போது, சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்தக்காரர் உடுப்பி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கும், அந்த ஆட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த கே.எஸ். ஈஸ்வரப்பாவுக்கும் தொடர்பு இருப்பதாகப் புகார் எழுந்தது.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து கே.எஸ். ஈஸ்வரப்பாவை கைது செய்யவும், பதவி விலகக் கோரியும் அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை இல்லத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் தற்போதைய காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா, உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த போராட்டத்தின் போது, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீஷித் அமர்வு முன் வந்தது. இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காங்கிரஸ் தலைவர்கள் அளித்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களுக்கு கர்நாடகா நீதிமன்றம், ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்து, அவர்கள் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அதன்படி, முதல்வர் சித்தராமையா மார்ச் 6 ஆம் தேதியும், காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா 11 ஆம் தேதியும், உள்கட்டமைப்பு வளர்ச்சித்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் மார்ச் 15 ஆம் தேதியும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.

Next Story

குறையாத தக்காளி விலை; ஆலோசனைக்குப் பின் முடிவெடுத்த அமைச்சர் பெரியகருப்பன்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

 'Sales of tomatoes in 500 ration shops'- Minister Periyakaruppan interview

 

தமிழகத்தில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்திருக்கும் நிலையில், தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே தமிழகத்தில் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை நடந்துவரும் நிலையில், மேலும் 200 கடைகளில் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டத்தில் அத்துறையைச் சேர்ந்த செயலாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பெரியகருப்பன், ''தமிழகத்தில் நாளை முதல் 500 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எங்களைப் பொறுத்தவரைக்கும் 35 ஆயிரம் கடைகளில் விற்கலாம் என்றால் கூட தக்காளி கிடைப்பது என்பது சிக்கலாக இருக்கிறது. நாள் ஒன்றுக்கு நியாயவிலைக் கடைகளில் சராசரியாக 50 கிலோ என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மொத்தமாகப் பண்ணைப் பசுமை கடைகளின் மூலமாக அம்மா உணவகம் போன்ற மற்ற இடங்களில் விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சராசரி விற்பனையை விட நான்கு மடங்கு விற்பனை இப்பொழுது கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

இயற்கையினுடைய கோளாறுதான் இந்த விலை உயர்வுக்குக் காரணம். இது எல்லாத் துறைகளும் ஒருங்கிணைந்து செய்யக்கூடிய வேலை. முதலில் விவசாயப் பெருமக்கள் அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறிகள், கனிகள் ஆகியவற்றை எந்தெந்தக் காலகட்டங்களில் பயிர் செய்தால் நியாயமான விலை கிடைக்கும், இதுபோன்ற தட்டுப்பாடுகள் தவிர்க்கப்படும் என்பதை எல்லாம் வேளாண்துறையின் மூலமாக அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாக எடுத்துச் செல்ல வேண்டும். கூட்டுறவுத்துறையைப் பொறுத்தவரை விவசாயிகளுக்குப் பொருளாதார ரீதியில் அவர்களுக்குத் தேவையான நிதி வசதிகளைச் செய்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தொடர்ந்து வேளாண்துறையோடு கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல் துறை கலந்து பேசி இருக்கிறோம். உயர்மட்ட அளவில் பேசி முடித்தவுடன் அடுத்த ஆண்டு பருவங்களில் உற்பத்தி குறைகின்ற நேரங்களில் நாம் எப்படி அந்த உற்பத்தியைப் பெருக்குவது என்ற முயற்சியில் ஈடுபட வேண்டும். எப்படிக் கடந்து வர வேண்டும் என்பதற்கான திட்டங்கள் எதிர்காலத்தில் தயாராக இருக்கும்'' என்றார்.