Skip to main content

ஹெல்மெட் போடு! இல்லை ஃபயின எடு! (படங்கள்) 

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 


இருசக்கர வாகனங்களில் ஓட்டுநரும், பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என போக்குவரத்து போலீஸார் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர். இந்த விதியை மீறுபவர்களிடம் இன்றுமுதல் அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் விபத்துகளை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினர் இருசக்கர வாகனங்களை தனிக்கை செய்து பின்னால் இருக்கையில் இருப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் அபராதம் விதித்தனர். படத்தில் இருப்பது அடையாறு மற்றும் அண்ணாசாலை ஆகிய பகுதிகள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பைக்கில் சாகசம்; இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
youth in Qatar; bike adventure incident

கத்தார் நாட்டில் இருசக்கர வாகனத்தில் படுவேகத்தில் சென்று சாகசம் செய்த இளைஞரின் வாகனத்தை அந்நாட்டு அரசு சுக்குநூறாக நொறுக்கிய சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு, கத்தார் நாட்டில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக பயணித்து சாகசம் செய்துள்ளார். மேலும், அவர் சாகசம் செய்த காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானதை அடுத்து பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். ஏனென்றால், கத்தார் நாட்டில் பொது சாலைகளில் முன் அனுமதியின்றி சாகசம் செய்வது என்பது பெரும் குற்றமாக கருதப்படுகிறது. அந்த வகையில், இளைஞரின் சாகச வீடியோவின் அடிப்படையில் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பைக் ஓட்டுநரான இளைஞரை கைது செய்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் சட்ட நடவடிக்கை எடுத்தது. அதன் அடிப்படையில், இளைஞரின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் அரவை இயந்திரத்தில் போட்டு சுக்குநூறாக நொறுக்கியுள்ளனர். இது குறித்து, உள்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், அந்த வீடியோவை பகிர்ந்து, இது போன்ற அத்துமீறல்களை ஒருபோதும் அனுமதிக்க இயலாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலுசெட்டி எனும் பகுதியில் டி.டி.எஃப். வாசன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி (17.9.2023) சென்ற போது பைக்கில் சாகசம் செய்து, விபத்தில் சிக்கி அவரை கைது செய்த வழக்கில், அவருடைய பைக்கை எரித்துவிட வேண்டும் என்று நீதிபதி சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Traffic diversion on OMR Road

சென்னை ஓஎம்ஆர் சாலையில் நாளை (16.12.2023) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஓஎம்ஆர் சாலையில் சோதனை அடிப்படையில் நாளை (16.12.2023) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, சோழிங்கநல்லூரிலிருந்து டைடல் பார்க் நோக்கி வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் சந்திப்பில் திருப்பி விடப்படும்.

மேலும் காமாட்சி மருத்துவமனை சந்திப்பிலிருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வரும் வாகனங்கள் பிஎஸ்ஆர் மால் அருகே இடதுபுறம் (ராஜீவ்காந்தி சாலையில்) திருப்பி விடப்பட்டு, பெருங்குடி சுங்கச் சாவடியில் புதிய யூ டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும்.

இதேபோல், கார்ப்பரேஷன் சாலையிலிருந்து துரைப்பாக்கம் சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ்காந்தி சாலையில் இடதுபுறம் திருப்பப்பட்டு, பெருங்குடி சுங்கச் சாவடியில் புதிய ‘யூ’ திருப்பத்தில் (U Turn) சென்று துரைப்பாக்கம் சந்திப்பு மற்றும் பிற இடங்களுக்குச் செல்லும். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.