Skip to main content

50,000 கட்டினால் 100 நாளில் ஒரு லட்சம்... சுமார் 50 கோடி வரை மோசடி செய்ததாக புகார்... இருவர் கைது

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

 

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் நகரில் லட்சுமி ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை மளிகை கடை நடத்தி வந்தார்  நா.இப்பம் வெங்கடேசன். இவரோடு இவரது நண்பர் பூட்டை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் கண்ணா ஆகிய இருவரும் மளிகைக்கடையில் இருந்தபடியே அப்பகுதி மக்களிடம் 50,000 கட்டினால் 100 நாட்களில் ஒரு லட்சம் திருப்பிதரப்படும் என விளம்பரம் செய்தனர்.


 

Chinnasalem



இதனை நம்பி பலர் 50,000 முதல் 5 லட்சம் வரை பணம் கட்டியுள்ளனர். முதலில் உறுதியளித்தபடி பணம் கட்டியவர்களுக்கு 100 நாட்களில் கட்டிய பணத்திற்கு மேல் இரட்டிப்பாக பணம் கொடுத்துள்ளனர். இந்த தகவல் தீயாக பரவியது. அப்பகுதி முழுவதும் சின்னசேலம், மாதவச்சேரி, சிறுவத்தூர், கல்லாநத்தம் மற்றும் சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், ஊனத்தூர் என இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் நகைகளை அடமானம் வைக்தும், விவசாய நிலத்தை விற்றும் 50,000 முதல் 5 லட்சம் வரை மேற்படி மோசடி நபர்களிடம் பணத்தை செலுத்தி உள்ளனர்.
 

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வெங்கடேசன் நடத்தி வந்த லட்சுமி ஸ்டோர் கடை மூடியே இருந்தது. அவர் கூறியபடி பணம் கட்டிய வாடிக்கையாளர்களுக்கு பணத்தை இரட்டிப்பாக தரவும் இல்லை. அப்போதுதான் வெங்டேசன் மோசடி நபர் என்பதை தெரிந்து கொண்டனர். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர். அதில் சுமார் 50 கோடி வரை சுருட்டி உள்ளது என புகார் அளித்தனர்.


 

இதனையடுத்து காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், பணம் கட்டி ஏமாந்தவர்கள் கோபம் அடைந்து வெங்கடேசனின் லட்சுமி ஸ்டோர் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த பொருட்களை வாரிச்சென்றனர். இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெங்கடேசன், சுரேஷ் கண்ணா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
 

அவர்களிடமிருந்து 3 லட்சம் பணம், அவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவைகளை பறிமுதல் செய்துள்ளனர். இவர்களின் மோசடிக்கு காரணம் மக்களின் பேராசையே என்கிறார்கள் அப்பகுதியிலுள்ளவர்கள்.


 

பொதுவாக தீபாவளிசீட்டு, பொங்கல் சீட்டு என மோசடி பேர்வழிகள் இதுபோன்று ஆரம்பித்து பணமோசடி, பணம் இரட்டிப்பு மோசடி செய்வது என்பது அவ்வப்போது நடைபெற்று வரும் தொடர் சம்பவங்களாக உள்ளன. இவைகள் பற்றிய விபரங்கள் பொதுமக்களுக்கு ஏற்கனவே ஏமாந்தவர்கள் மூலம் தெரிந்திருந்தும் தாங்கள் விரைவில் பணக்காரர்கள் ஆக வேண்டும், கார் பங்களா என சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என பேராசைப்பட்டு இப்படிப்பட்ட மோசடி ஆசாமிகளிடம் சிக்கி தங்கள் பணத்தை இழந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகளிடம் ஏமாறாமல் தங்களை பாதுகாத்துக்கொள்வது என்பது மக்களிடமே உள்ளது என்கிறது காவல்துறை.
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.