Skip to main content

மீண்டும் முறைப்படி தேர்தலில் நிற்பேன்!! -கே.பாக்யராஜ்!!

Published on 02/11/2018 | Edited on 02/11/2018

 

PJ

 

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா  செய்துள்ளார்.

 

 

அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் சர்கார் படத்தின் கதையும் வருண் என்ற இணை இயக்குனரின் செங்கோல் என்ற கதையும் ஒன்று என்று இயக்குனர் வருணனுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது திரைப்பட எழுத்தாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

இயக்குனர் பாக்யராஜ் கடந்த 6 மாதத்திற்கு முன்தான் எழுத்தாளர் சங்க தலைவராக  பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

​ pk

 

​ pk

 

​ pk

 

இதுகுறித்து அவர் ,

எனக்கு நேர்ந்த அசவுகரியம், ஒழுங்கீனங்கள் பற்றி சங்க நலன் கருதி தெரிவிக்க விரும்பவில்லை. சர்கார் பற்றிய விவகாரத்தில் இயக்குனர் முருகதாஸிடம் நான் கெஞ்சியும் அவர் உடன்படவில்லை. முருகதாஸ் உடன்படாததால் வேறு வழியின்றி சர்கார் படத்தின் கதையை வெளியில் சொல்லவேண்டிய நிலை வந்தது. முறைப்படி தேர்தலில் நின்று மெஜாரிட்டியோட வெற்றி பெற்று  கடமையாற்றுவேன்  என கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

  

சார்ந்த செய்திகள்