Skip to main content

விபரீதத்தில் முடிந்த எதிரெதிர் வீட்டு பெண்களின் வாய்சண்டை!

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

Fighting of opposing housewives that ended in tragedy

 

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ளது குத்தாம்பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளையராஜா-வாணிஸ்ரீ (26) தம்பதியர். இவர்களது வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிப்பவர்கள் ராஜேந்திரன்-இளவரசி(45) தம்பதியர். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் அவ்வப்போது ஒருவருக்கொருவர் சாடை மாடையாக திட்டிக்கொண்டு இருப்பது வழக்கம். சம்பவத்தன்று இருவருக்குமிடையே நேருக்கு நேர் கடுமையான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு உள்ளனர்.

 

இந்த வாய்த்தகராறு போது இளவரசி, வாணிஸ்ரீயை கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த வாணிஸ்ரீ வீட்டில் எலி பேஸ்ட் மருந்தை எடுத்து சாப்பிட்டுள்ளார். தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக அண்ணாமலை நகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வாணிஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் கேள்விப்பட்ட அவருடன் சண்டையிட்ட இளவரசி பயந்துள்ளார்.

 

வாணிஸ்ரீ இறந்து போனதால் அவர் தன்னால் தான் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார் என போலீஸ் வழக்கு போடும் அதனால் மேலும் மேலும் பிரச்சனை வருமோ என்று பயந்த இளவரசி தனது வீட்டில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீசார் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர் வீட்டுப் பெண்கள் ஒருவரை ஒருவர் முன்விரோதம் காரணமாக திட்டிக் கொண்ட சம்பவத்தில் இருவருமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.