Skip to main content

பணத்தை கேட்டு சென்ற இடத்தில் கைக்கலப்பு... உயிரிழந்த பெண்!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021

 

Fight happens when women went to collect money... woman died

 

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலையம் அருகில் உள்ளது பொம்மையார்பாளையம் மீனவர் பகுதி. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மனைவி செண்பகவள்ளி (56). இவர் அதே பகுதியில் உள்ள ஐயப்பன்(45) என்பவருக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய் பணம் கடனாக கொடுத்துள்ளார். கொடுத்த பணத்தை அவ்வப்போது திருப்பித் தருமாறு பலமுறை கேட்டும் ஐயப்பன் தரவில்லை.

 

இந்த நிலையில் நேற்று (05.07.2021) இரவு 8 மணி அளவில் செண்பகவள்ளி, அவரது மகன் விமல் ஆகியோர் ஐயப்பன் வீட்டிற்குச் சென்று தங்களுக்குத் தர வேண்டிய பணத்தைத் தருமாறு கேட்டுள்ளனர். அப்போது ஐயப்பன் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகியோர் “பணத்தை எங்களால் தர முடியாது உன்னால் முடிந்ததைச் செய்துகொள்” என்று செண்பகவள்ளி அவரது மகன் விமல் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த ஐயப்பனும் அவரது மனைவி திவ்யாவும் செண்பகவள்ளியை தாக்கியுள்ளனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதனால் செண்பகவள்ளிக்குப் பலத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.

 

உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்படி கொண்டு செல்லும் வழியிலேயே செண்பகவள்ளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். மேலும், செண்பகவள்ளி கொடுத்த கடனைத் திருப்பி கொடுக்க மறுத்ததோடு அவரை தாக்கி உயிரிழப்புக்கு காரணமான ஐயப்பன், அவரது மனைவி திவ்யா ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைப் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கொடுத்த பணத்தைக் கேட்டதற்காக கொலை செய்யும் அளவிற்குத் துணிந்த ஐயப்பன், அவரது வழியும் திவ்யா ஆகியோரது செயலைக் கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; போலீசார் தீவிர விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
woman lost their life in trichy

திருச்சி கீழ தேவதானம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 46. ). இவரது மனைவி நித்யா (வயது 34). இவர் கடந்த ஆறு வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு கடந்த 3 வருடங்களாக தோல்நோய் தொடர்பான பிரச்சனையும் இருந்து வந்துள்ளது. இதற்காக நித்யா சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் விரக்திடைந்த நித்யா சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

திருமணமான பெண்ணுக்கு கத்தி குத்து; முன்னாள் காதலன் வெறிச்செயல்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 married woman has been stabbed by her ex-boyfriend

திருப்பத்தூர் எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி. அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுநரான அஜித்குமார்.

இந்துமதி - அஜித்குமார் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. எனவே இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர ‌ இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிக்கு தற்போது ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர்  ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்துள்ளார் இந்துமதி. இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித்குமார் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி  அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியதாக தெரிகிறது.

 married woman has been stabbed by her ex-boyfriend

அதனைத் தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார்  திருப்பத்தூர்   பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் ஆட்டோ ஓட்டிச் சென்றபோது இந்துமதி அவ்வழியாக  சென்றுள்ளார். அப்போது அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசி உள்ளார். அங்கே இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து இந்துமதியின் முகம் மற்றும்  உடம்பின் பல்வேறு பகுதிகளில் குத்தியும்,வெட்டியும் விட்டு  தப்பியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக  சரணடைந்தார்.