Skip to main content

மது குடிக்க பணம் கேட்டவர் மீது கொடூர தாக்குதல்! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!

Published on 26/05/2022 | Edited on 26/05/2022

 

Fight between two people police investigation

 

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை பட்டப்பகலில் தந்தையும், மகனும் சேர்ந்து கொடூரமாக கட்டையால் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி நாகை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


நாகை மாவட்டம், தெற்கு பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நடவண்டி மோகன். இவர், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவராக இருந்து வருகிறார். இந்நிலையில், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் பழக்கடை மற்றும் மெழுகுவர்த்தி வியாபாரம் செய்து வரும் தந்தையும் மகனுமாகிய ஆனந்த மாரிமுத்து, மதியழகன் ஆகியோரிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.


இதனால் இவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியது. ஆத்திரம் அடைந்த தந்தை மதியழகனும், மகன் ஆனந்தமாரி முத்துவும் நடவண்டி மோகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். நடவண்டி மோகன் நிலை தடுமாறி கீழே விழுந்தும், இருவரும் கட்டையால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தொடர்ந்து, காவல்துறையால் மீட்கப்பட்ட நடவண்டி மோகன் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட ஆனந்த மாரிமுத்து, மதியழகன் ஆகியோரை கைது செய்த வேளாங்கண்ணி பொறுப்பு காவல் ஆய்வாளர் பசுபதி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் ஆனந்தமாரிமுத்து, மதியழகன் ஆகியோர் மீதும் வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் சில வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. 


வேளாங்கண்ணி பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் கொடூர தாக்குதல் நடந்த வீடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.