Skip to main content

காலி மைதானத்திற்காக பெட்ரோல் குண்டு வீச்சு, கல்வீச்சு...!!!

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

"இது எங்களின் இடுகாடு என ஒரு பிரிவினரும், இல்லையில்லை இது நாங்கள் ஒதுங்குமிடம் என மற்றொரு பிரிவினரும் நீண்ட நெடுநாட்களாக, காலி மைதானத்திற்காக வருடக்கணக்கில் போராடி வந்த நிலையில், அடிதடி கல்வீச்சில் ஆரம்பித்து பெட்ரோல் குண்டு வீச்சில் முடிந்திருக்கின்றது பிரச்சனை.
 

karaikudi



யாருடைய படம் இந்த சுவற்றில் இடம்பெறவேண்டுமென? அரசியல்வாதிகள் மோதிக்கொள்ளும் "மெட்ராஸ்" படக்கதைப் போல், இது எங்களுக்கான இடம் என காலி மைதானத்தை நோக்கி அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளது சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள இரு சமூகம். "இங்குள்ள ஊர்களும், கிராமங்களும் வடிவம் பெறத் தொடங்கிய காலந்தொட்டு வசிப்பவர்கள் நாங்கள். ஒவ்வொரு ஊரிலும் எங்களுக்கான இடங்கள் உள்ளன.

அந்த வரிசையில் இது எங்களுடைய சமூகத்திற்குட்பட்ட இடம். அதற்கான செப்புப் பட்டயமே இருக்கின்றது. எங்களுக்கு சொந்தமான அந்த இடத்திற்கு உரிமைக் கொண்டாட அவர்கள் யார்? என ஒரு பிரிவினர் கேள்வி எழுப்பி வேலி போட்டு அடைத்து வைக்க, "ஊர் ஆரம்பிப்பதற்கு முன்னரே நாங்களே பூர்வகுடிகள். எங்கள் பெண்டு பிள்ளைகள் ஒதுங்கிய இடத்தினை அவர்கள் அடைப்பது என்ன நியாயம்?" எதிர்க்கேள்வி எழுப்புகின்றனர் மற்றொரு பிரிவினர். இப்படியாக பிரச்சனை எழுந்து வந்த நிலையில், ஒரு பிரிவினரை நோக்கி மற்றொரு பிரிவினர் தாக்குதலைத் தொடங்கினர் ஞாயிற்றுக்கிழமை இரவில்.
 

karaikudi


காரைக்குடி கோட்டையூர் வசந்தமாளிகை பேருந்து நிலையம் அருகிலுள்ள வீட்டினை முதல்குறியாய் கொண்டு தாக்குதலைத் தொடங்கிய ஒரு சமூகம், அங்கிருந்து முன்னேறி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரத்தின் தம்பி சுப்பையாவையும், அவரது மகன் ஹரிபிரசாத்தையும் அடித்து துவைத்ததோடு மட்டுமில்லாமல் தீ வைத்து கல்வீசி தாக்குதலை நீட்டித்தது. இதனால் கோபமடைந்த தாக்குதலுக்குள்ளான மற்றொரு பிரிவினர் பெட்ரோல் குண்டு மூலம் பதில் தாக்குதலை தொடங்க ஊரே பரபரப்பானது.

தகவலறிந்த காவல்துறை இரவு வேளை என்பதால், போக்குவரத்தையும் மின்சாரத்தையும் நிறுத்திவைத்து விட்டு இருதரப்பிலும் 60க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து கலவரத்தை நிறுத்தியது. 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்த இத்தாக்குதலில் கார் மற்றும் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த தாக்குதலில் கேப்டன் டிவி செய்தியாளரும் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் இருதரப்பையும் கைது செய்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் நிலைமை இன்னும் சீராகவில்லை. தொடர்ந்து பதட்டமாக உள்ளதால் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.