Skip to main content

தாய் தந்தையிடையே சண்டை; தந்தை செய்த செயலால் மகன் தற்கொலை!!

Published on 19/06/2021 | Edited on 19/06/2021
Fight between mother and father; Son commits suicide by father

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது புகைப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 43 வயது கூலி தொழிலாளி சீனிவாசன். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் வேலைக்குச் சென்ற சீனிவாசன் உழைத்து சம்பாதித்த பணத்தில் குடித்துவிட்டு வெறுங்கையோடு இரவு வீட்டுக்கு வந்துள்ளார். இதைக் கண்ட அவரது மனைவி பூமாதேவி கணவரிடம் தினசரி வேலைக்குச் சென்று சம்பாதிக்கின்ற பணத்தில் இப்படி குடித்துவிட்டு வந்தால் நாம் நமது குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது, பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று சண்டை போட்டுள்ளார்.

 

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அவரது மகன் குபேந்திரன் தாய் தந்தை இருவருக்கும் இடையே நடந்த சண்டையை தடுக்க முயன்றார். அவர் தடுப்பதையும் மீறி அவரது தந்தை சீனிவாசன் தாயாரிடம் ரகளையில் ஈடுபட்டதால் கோபமுற்ற குபேந்திரன் தந்தை சீனிவாசன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மகன் தன்னை கன்னத்தில் அறைந்ததும் சீனிவாசனின் போதை கலைந்து சுயநினைவு அடைந்தார். பலர் பார்க்க தான் பெற்ற மகன் தன் கன்னத்தில் அறைந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. அதை அவமானமாகக் கருதினார். இதனால் மனம் வெறுத்துப் போன சீனிவாசன் மீண்டும் மதுக் கடைக்குச் சென்று மது வாங்கி வந்து அதில் விஷத்தைக் கலந்து குடித்துள்ளார்.

 

இதனால் மயங்கி விழுந்த சீனிவாசனை அக்கம்பக்த்தினர் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சீனிவாசன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தந்தையை தாம் அறைந்ததால்  தானே அதை அவமானமாகக் கருதி தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பதை அறிந்த அவரது மகன் குபேந்திரன் மிகவும் வேதனைப்பட்டார். தனது தந்தை உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்கு நாம் தானே பொறுப்பு ஊர் நம்மை பலவாறு பேசுமே என்று மனம் நொந்து போன குபேந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதைக் கண்ட அவரது உறவினர்கள் குபேந்திரன் உடலை எடுத்துச் சென்று தீ வைத்து எரித்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த எல வாசனூர் கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட குபேந்திரன் உடலை எங்களுக்குத் தெரியாமல் ஏன் எரித்தீர்கள் என்று கேட்டுள்ளனர். இதனால் கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு போலீசார் அங்கிருந்து சென்றுள்ளனர். தந்தை மகனுக்கு ஏற்பட்ட சண்டையில் தந்தை தற்கொலைக்கு முயற்சிக்க அதற்கு நாம் காரணமாகி விட்டோமோ என்று மனம் நொந்த மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புகைப்பட்டி கிராம மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.