Skip to main content

டாஸ்மாக்கு எதிராக போராடினால் கடத்திச் சென்று வழிப்பறி வழக்கு..!

Published on 03/08/2018 | Edited on 27/08/2018
asd


தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் அருகே உள்ள பணிகொண்டான் விடுதி ஊராட்சியில் கல்லனை கால்வாய் ஆற்றங்கரையில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி பிரமாண்டமாக கடந்த 26ந் தேதி மாணவர்கள், விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கீழ ஊரணிபுரம் விவசாயி செல்லையனை இன்று விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

மாலை வரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தெரியாத உறவினர்கள் காவல் நிலையம் வரை சென்று கேட்ட போதும் செல்லையன் இருக்குமிடம் பற்றி யாரும் சொல்லவில்லை. அதனால் சாலை மறியல் செய்வோம் என்று சொல்லிவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது விவசாயி செல்லையன்.. விக்னேஷ் என்ற இளைஞரை கத்தியை காட்டி மிரட்டி ரூ.200 வழிப்பறி செய்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்து உடனடியாக சிறைக்கு அனுப்பி வைத்தனர். அதனால் உறவினர்கள் இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த ஒரத்தநாடு டிஎஸ்பி சமாதானம் செய்து உறவினர்கள் விவசாயிகளுடன் காவல் நிலையம் சென்றால் சிறைக்கு அனுப்பிய தகவலை போலீசார் கூறியுள்ளனர். வழக்கு இல்லாமல் சிறையிலிருந்து செல்லப்பனை அழைத்து வந்து ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளனர்.
 

sd


போராட்டக் களத்தில் முன்னின்ற சின்னத்துரை கூறும் போது.. மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் டாஸ்மாக் கடை திறக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் பல கிராம மக்களும் மனு கொடுத்தோம். ஆனால் அந்த மனுவுக்கு மதிப்பளிக்காமல் கடந்த 7ந் தேதி டாஸ்மாக் கடைகளை திறந்ததால் 9ந் தேதி போராட்டம் நடத்தினோம். ஒரு வாரத்தில் கடைகளை அகற்றுவதாக மாவட்ட எஸ்.பி உத்தரவாதம் கொடுத்தார்.

ஆனால் சொன்னபடி கடைகள் அகற்றவில்லை. அதனால் 26ந் தேதி மாணவர்களுடன் போராட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள் கைது செய்யப்பட்டோம். மாணவர்களை ஆற்றில் குதிக்க வைத்தார்கள் போலீசார். அன்றே போராட்டம் நடத்தியவர்கள் மீது ரகசியமாக வழக்கு பதிவு செய்ய திட்டமிட்ட போலீசார் இன்று விவகாயி செல்லையனை கடத்திச் சென்று பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

அதே போல போராட்டத்தில் நின்ற விவசாயிகளின் பைக், ஆடுகள் காணாமல் போனதுடன் பத்மினி என்ற பெண் விவசாயியின் 2 ஏக்கர் தைல மரக்காட்டில் தீ வைத்துள்ளனர். இதை எல்லாம் கண்டுகொள்ளாத போலீசார் விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுகிறது. இதையெல்லாம் கண்டித்து மீண்டும் பெரிய போராட்டம் நடத்துவோம் என்றார். மக்களை கெடுக்கும் டாஸ்மாக் வேண்டாம் என்றால் வழிப்பறி வழக்கா? எம்.பி சொன்னால் எல்லாம் நடக்கும் என்கிறார்கள் போராடிய மக்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.