Advertisment

கல்வி உதவித்தொகை குறைப்புக்கு எதிராக போராட்டம்! மாணவர்கள் - போலீசாரிடையே தள்ளுமுள்ளு!

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை தமிழக அரசு குறைத்துள்ளதை கண்டித்து இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்த போராட்டத்தின் போது மீண்டும் கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என முழுக்கங்களை எழுப்பினர். சென்னை சேப்பாக்கம், விருந்தினர் மாளிகையில் இருந்து தலைமைச் செயலகம் வரை பேரணியாக சென்று முற்றுகையிட முயன்ற மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

Advertisment
students protest
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe