Advertisment

பள்ளி அருகே எரிந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு சிறுமி உடல்!  

Fifth grade girl's body found near school!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைபாச்சலூர் எனும் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய மகள் பிரித்திகா, பாச்சலூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் இன்று காலை பள்ளிக்குச் சென்ற பிரித்திகா பள்ளியின் பின்புறம் உள்ள ஒரு புதரில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். தகவலறிந்த தாண்டிக்குடி போலீசார் பிரித்திகா உடலை மீட்டு சடலத்தின் அருகே இருந்த பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டியை கைப்பற்றினர்.

Advertisment

போலீசார் விசாரணையில் பிரித்திகாவின் அக்கா மற்றும் தம்பி அதே பள்ளியில் படிப்பதாகவும் காலையில் 9:30 மணிக்கு பள்ளிக்கு வந்த மாணவி பின்னர் நீண்ட நேரமாகியும் வகுப்பறைக்கு வரவில்லை என தெரிகிறது. இதனையடுத்து அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் பள்ளியின் பின்புறம் உள்ள ஒரு புதர் பகுதியில் சென்று பார்த்தபோது பிரித்திகா முகம் எரிந்த நிலையில் கிடப்பதை பார்த்தது தகவல் சொல்லி உள்ளார்.

இதனிடையே பிரித்திகாவின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பிரித்திகா தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறி பள்ளியினை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பள்ளியில் தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் ராஜதுரை, மணிவேல் ஆகிய இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வந்து இருந்தனர். இந்நிலையில் பள்ளி மாணவியின் சந்தேக மரணம் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதோடு எரிந்த நிலையில் பள்ளி மாணவி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe