Skip to main content

மதுபோதையில் மாணவிகளிடம் அத்துமீறல்; அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடைநீக்கம்!

Published on 14/04/2023 | Edited on 14/04/2023

 

 female students under the influence of alcohol; Government school teacher dismissal!

 

மதுபோதையில் பள்ளிக்கு வருவதோடு, மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளி ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

 

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள முளுவி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு முளுவி மற்றும் சுற்றுவட்டார மலைக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் ஹரிஹரன் என்பவர் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் மதுபோதையில் பள்ளிக்கு வருவதாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் சேலம் மாவட்டக் கல்வித்துறை அலுவலர்கள் நேரில் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

 

இதில் ஆசிரியர் ஹரிஹரன் மீதான புகார் உண்மை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சேலம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ், ஆசிரியர் ஹரிஹரனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தரப்பில் விசாரித்தபோது, ''பட்டதாரி ஆசிரியர் ஹரிஹரன், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும், வகுப்புக்கும் செல்லாமல் ஆசிரியர்கள் அறையிலேயே தூங்கிக் கொண்டு இருப்பார் என்றும் விசாரணையில் மாணவர்கள் கூறுகின்றனர். குடிபோதையில் சில மாணவிகளிடம் அவர் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் விசாரித்தபோது, அவரிடமும் தகராறு செய்துள்ளார். இதனால் ஆசிரியர் ஹரிஹரன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைக்காக காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட உள்ளது'' என்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர்; காத்திருந்து அவமானப்படுத்திய கிராம மக்கள்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 The family was dragged in a procession wearing sandal garlands and Youth arrested in POCSO case

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், தொட்டவாடா கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு, 18 வயதுக்குட்பட்ட ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த அணில் மூக்னாவர் என்ற வாலிபர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பைலேஒங்கலா புறநகர் போலீசார், வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர். அதன் பின்னர், அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஹிண்டல்கா சிறையில் அடைத்த்னார். 4 மாதங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை சில தினங்களுக்கு முன்பு, வாலிபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்து தனது கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது, வாலிபர் கிராமத்திற்குள் வந்ததை அறிந்த சிறுமியின் குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக இழுத்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சிறுமியின் குடும்பத்தினர் வாலிபரின் கையை துணியால் கட்டி செருப்பால் அடித்தும், அவருக்கு செருப்பு மாலை அணிவித்தும் கிராமத்திற்குள் ஊர்வலமாக இழுத்து வருகின்றனர். அவர்களோடு, அந்த கிராம மக்களும் உடன் வருகின்றனர். இதனை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர், தங்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. 

Next Story

11 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Tragedy of 11-year-old girl; Police serious investigation

மதுரை மாவட்டம் கூடல் புதூர் என்ற பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வசித்து வந்த வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (21.03.2024) அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சிறுமியின் வீட்டிற்கு வந்த தடயவியல் ஆய்வாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான முடிவு வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் மரணம் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு  தற்போது போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றி விசாரணையை மதுரை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.