Skip to main content

அடர் வனத்துக்குள் பெண் யானை உயிரிழப்பு..! ஆண் யானை தாக்குதல் காரணமா?

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

Female elephant dies in dense forest ..! Is male elephant attack the cause?
                                                     மாதிரி படம் 

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் காப்பகமாக உள்ளது. இந்த வனத்தில் யானைகள், மான்கள், புலி, சிறுத்தை, கரடி, காட்டு எருமைகள், செந்நாய், என பல வகை வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. 

 

விலங்குகள் மோதல், விபத்து, வயோதிகம், உடல் நலிவுறுவது உள்ளிட்டவற்றால் பல வன விலங்குகள் அவ்வப்போது இறந்து விடுகிறது. செம்மன் குட்டை என்ற வனப்பகுதியில் வனவர் பெர்னால்டு, மாவட்ட வன அலுவலர் அருள்லால் ஆகியோர் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் 14ஆம் தேதி ரோந்து சென்றுள்ளனர்.

 

அப்போது அந்த வனப்பகுதியில் ஒரு இடத்தில் யானை ஒன்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அந்த  இடத்துக்கு வந்து, இறந்து கிடந்த யானையை அந்த இடத்தில் வைத்தே பிரேதப் பரிசோதனை செய்தனர். இதில் இறந்தது பெண் யானை என்றும், வயது முதிர்வு காரணமாக இறந்திருக்கலாம் அல்லது உறவுக்காக ஆண் யானை தாக்கியதால் இறப்பு நேர்ந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடர்ந்த வனப் பகுதியில் 108 ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
girl child was born in the 108 ambulance near Anthiyur in a thick forest area at night

ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுக்கா, ஓசூர் அருகே சின்ன செங்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சரசு என்கிற சரசா (27). சரசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு 9:45 மணியளவில் சரசுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது உறவினர்கள் தேவர்மலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் குழுவினருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று சரசை ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது மணியாச்சி பள்ளம் என்ற அடர்ந்த வனப் பகுதியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது சரசுக்கு பிரசவ வலி அதிகரித்தது. நிலைமையைப் புரிந்து கொண்ட மருத்துவ குழுவினர் ஆம்புலன்ஸை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு சரசுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினர். இதில் சரசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  108 மருத்துவ குழுவினருக்கு சரசு மற்றும் அவரது உறவினர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.