ADVERTISEMENT
ADVERTISEMENT
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக ஒரு பெண் பேருந்து நடத்துநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம், ராசிப்புரத்தை அடுத்த பழனியப்பனூர் பகுதியைச் சேர்ந்த பயணச்சீட்டு பரிசோதகர் முனியப்பன், கடந்த 2010- ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். வாரிசு அடிப்படையில் அவரது மகள் இளைய ராணிக்கு (வயது 34) அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து, ஒரு மாதமாகப் போக்குவரத்துக் கழகத்தில் பயிற்சி பெற்று வந்த அவர், நகரப் பேருந்து நடத்துநராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
ராசிபுரம் To சேலம் 52Lss என்ற எண் கொண்ட பேருந்தில் பணியில் ஈடுபட்டு வரும் இவர் ஆர்வத்துடனும் சுறுசுறுப்பாகவும் பணியாற்றி வருவது பயணிகளிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
ADVERTISEMENT
Show comments