Skip to main content

‘நமக்கு நாமே’திட்டத்தின் மூலம் மேம்படுத்துதல் பணிகளை மேற்கொள்ளும் நலச்சங்கத்தினர்!

Published on 23/12/2021 | Edited on 23/12/2021

 

Fellows working to improve the 'us and them' project

 

திருச்சி மாநகராட்சி மூலம் ‘நமக்கு நாமே’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது பொதுமக்களின் பங்களிப்புடன் நீர்நிலைகள் புனரமைப்பு, விளையாட்டுத் திடல் அமைப்பு, திருவிளக்குகள் பொருத்துதல், பூங்கா உருவாக்குதல் மற்றும் மேம்படுத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், மரக்கன்று நடுதல், மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்துதல், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள கட்டடங்களில் சுற்றுச்சுவர் மற்றும் பிற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் என்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

அதன்படி மொத்த மதிப்பீட்டுத் தொகையில் பொதுமக்களின் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கு தொகையை செலுத்தினால் மீதி தொகையை அரசே ஏற்று பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தின் கீழ் தனி நபராகவோ குழுவாகவோ குடியிருப்போர் நல சங்கங்கள் மூலமாகவும் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் பணிகளை மேற்கொள்ளலாம். இதற்கான பொதுமக்களின் பங்களிப்பு தொகையை மாநகராட்சியின் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பின் மாநகராட்சியின் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணி மேற்கொள்ளப்படும்.

 

இந்நிலையில், ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ள சாரதி நகர் குடியிருப்போர் நலச்சங்கம், அஸ்வின் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், சங்கிலியாண்டபுரம் அண்ணா நகர் 2வது தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் என இன்னும் பல்வேறு நலச்சங்கங்கள், தெருக்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதுவரை 55 லட்சத்து எண்பத்து ஏழாயிரம் ரூபாய் தொகையைக் காசோலையாகவும் வங்கி வரைவோலையாகவும் மாநகராட்சி அலுவலகத்தில் செலுத்தியுள்ளனர். எனவே ‘நமக்கு நாமே’ திட்டத்தின் மூலம் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் அமைத்தல் அல்லது மேம்படுத்துதல் பணிகளுக்கான பங்குதொகையை மாநகராட்சியில் செலுத்தி, உடனடியாக தேவைப்படும் வசதியைப் பொதுமக்கள் மற்றும் நலச்சங்கங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.