தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் வருமானவரித்துறை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருமான வரித்துறை கூடுதல் பொது இயக்குநர் ஸ்வப்னாநானுசம்பத், வருமானவரி கூடுதல் இயக்குநர்கள் மோகன்ராஜ், பார்வதி ஆகியோர் கலந்து கொண்டு வியாபாரிகளின் வருமானவரி மற்றும் ஊழல் தொடர்பான தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். மேலும், இதில் வியாபாரிகள் சங்க சென்னை மண்டல தலைவர் ஜோதி, தலைமைச்செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார், திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கத்தலைவர் வி.பி.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.