
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனைநிறைவடைந்ததை அடுத்து,கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில், கடந்தஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பெங்களூருபுறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றார்.
இந்நிலையில் நேற்று மதுரையில்திருமண நிகழ்ச்சி ஒன்றில்கலந்துகொண்ட டி.டி.வி.தினகரன்செய்தியாளர்களைச்சந்திக்கையில், வரும் பிப்.7 ஆம் தேதி சசிகலா வருவார் எனதெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்பொழுதுபிப்.7 ஆம் தேதிக்குப் பதில் பிப். 8 ஆம் தேதி காலை9 மணிக்குதமிழகம் வருவார் எனதினகரன் தெரிவித்துள்ளார்.
Follow Us