Skip to main content

பிப்.7 சசிகலா வருகை இல்லை... புதிய தேதியை அறிவித்த டி.டி.வி.தினகரன்! 

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

Feb 7 Sasikala not visiting ... TTV Dinakaran announces new date!

 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஞாயற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா, அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பெங்களூரு புறநகர் பகுதியான தேவனஹல்லி அருகே உள்ள பண்ணை வீட்டுக்குச் சென்றார்.

 

இந்நிலையில் நேற்று மதுரையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்திக்கையில், வரும் பிப்.7 ஆம் தேதி சசிகலா வருவார் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது பிப்.7 ஆம் தேதிக்குப் பதில் பிப். 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழகம் வருவார் என தினகரன் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்