Skip to main content

அதிமுக வேட்பாளரின் தோல்வி பயம், மண்டபத்திற்கு சீல்- ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

வேலூர் மக்களவை திமுக  வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக ஆம்பூர் வருகை தந்த மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி மீது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த எதிர்ப்பு அலை இப்போதும், அதே நிலையில் தான் உள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் இரண்டு மாதங்களாக நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளுக்கு போதிய அவகாசம் அளிக்காமல் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சட்டத்தை நிறைவேற்றி வருகிறார். 
 

புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து சொல்வதற்கு குறுகிய காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பன்முகத்தன்மை மட்டும் இல்லாமல் ஏழை எளிய மக்களின் கல்வியை பறிக்கும் வகையிலும், கல்வியை ஒரு வியாபாரமாக மாற்றக்கூடிய வகையில் இந்த புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. ஜனநாயகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தகவல் பெறும் உரிமை சட்டத்தை நீர்த்துப் போகும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

 

 Fear of failure of AIADMK candidate, seal the hall Interview with manitha neya makkal katchileader Jawahirullah!



 

முத்தலாக் சட்டத்தை கடந்த முறை மோடி பிரதமராக இருந்த போது நாடாளுமன்றத்திலே மூன்று முறை அவசர சட்டமாக பிறப்பிக்கப்பட்டது. இப்போது அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முத்தலாக் சட்டத்தை சட்டவிரோதம் என்று கூறியதே தவிர, தலாக் சொல்லக்கூடிய கணவன்மார்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தி பேசும் போது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு நாடு முழுவதும் 463 முத்தலாக் வழக்குகள் பதிவாகியுள்ளதாக என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.  கடந்த இரண்டு மாதங்களாக மத்திய அரசு மக்கள் நலனுக்கும் தமிழ் நாட்டின் நலனுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது.
 

தேர்தல் விதி மீறல் என்றால் மண்டபத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டுமே தவிர மண்டபத்திற்கு சீல் வைத்த வரலாறு தமிழ்நாட்டிலேயே இப்போது தான் நடந்துள்ளது. அதிமுக வேட்பாளரின் தோல்வி பயத்தால் தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்தி இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 Fear of failure of AIADMK candidate, seal the hall Interview with manitha neya makkal katchileader Jawahirullah!


 

முத்தவல்லிகளுடன் ஆலோசனைக்காக அந்த மண்டபத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வழியாக வந்த திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் கதிர் ஆனந்த் உள்ளே வந்துள்ளனர். வாக்கு சேகரிப்பதற்காக பல்வேறு சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் ஆகியவரை நேரில் சந்திக்கின்றோம் அதையெல்லாம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் என கருத முடியும்மா? ஒரு தேநீர் கடைக்குச் சென்று ஒரு தேனீர் அருந்திவிட்டு அங்குள்ள மக்களிடம் வாக்கு கேட்டால் அந்த தேனீர் கடைக்கு சீல் வைத்து விடுவார்களா? சீல் வைத்தது ஒரு அராஜக நடவடிக்கை இதை சட்டரீதியாக அவர்கள் எதிர் கொள்வார்கள்.
 

லோக்சபாவில் திமுக உறுப்பினர்கள் என்.ஐ.ஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் அதற்கு முன்பாக திமுக உறுப்பினர் ராசா இந்த சட்டத்தை எதிர்த்து பேசினார். அதற்கு பின்னர் அவர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். அனைத்து அரசியல் கூட்டமைப்பின் சார்பாக திமுக தலைவர் ஸ்டாலின், அறிவாலயத்தில் சந்தித்து என்.ஐ.ஏ சட்டத்திற்கு திமுக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளோம்.  அந்த சட்டம் எப்படி எல்லாம் முஸ்லீம் இளைஞர்கள் மீது ஏவுவார்கள் என்பது குறித்து அவரிடம் விவரித்தோம், அதன் பிறகு அவர் பாஜக அரசு அரசியல் ஆதாயத்துக்காக என்.ஐ.ஏ சட்டத்தை பயன்படுத்தி இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்வதை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். என்று ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.





 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட அந்தப் பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.