Skip to main content

ஃபாத்திமாவின் மரணத்திலுள்ள உண்மை வெளிவரும் - ஃபாத்திமாவின் தந்தை நம்பிக்கை...

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

சென்னை ஐஐடி கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீஃப் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தற்கொலைக்கு மூன்று ஆசிரியர்கள்தான் காரணம் என தன்னுடைய மொபைலில் நோட்டும் செய்திருக்கிறார். மத்திய குற்றப்பிரிவு போலீஸார் இந்த தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று ஃபாத்திமாவின் தந்தையிடமும், உறவினரிடமும் விசாரணை நடைபெற்றது.
 

latheef

 

 

நான்கு மணிநேரமாக நடைபெற்ற விசாரணைக்கு பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். அனைத்து ஆவணங்களையும் காவல்துறை வசம் அளித்துள்ளோம்.குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை என காவல்துறை உறுதி அளித்துள்ளது. விசாரணையில் எனது மகள் பாத்திமாவின் மரணத்தில் உள்ள உண்மை வெளியே வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாத்திமா மரணம்! சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட கோரிய வழக்கில் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 IIT incident! Postponement of verdict of CBI transfer case

 

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன், சேசஷாயி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில், பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பான வழக்கு கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் இருந்து,  மத்திய குற்றப்பிரிவுக்கு விசாரணை மாற்றப்பட்டிருக்கிறது.  மத்திய குற்றப்பிரிவில், கூடுதல் ஆணையர் ஈஸ்வரன் கண்காணிப்பில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.  சிபிஐ இலாகாவில் பணியாற்றிய அதிகாரிகளே விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.   மேலும் வழக்கு விசாரணை என்பது ஆரம்பக்கட்ட நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள்,  வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

 

 

Next Story

ஐஐடி -யில் மீண்டுமொரு தற்கொலை... காவல்துறையினர் தீவிர விசாரணை...

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

இந்தியாவின் மிகமுக்கியமான கல்வி நிலையங்களில் ஒன்றான ஐஐடி, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகிறது. உலகப்புகழ் பெற்ற இந்த ஐஐடிக்களில் சமீப காலங்களாக மாணவர்கள் தற்கொலை அதிகரித்திருப்பதாக தொடர்ந்து புள்ளிவிவரங்கள் வந்தவண்ணம் உள்ளன.

 

guwahati iit student passed away

 

 

அந்த வகையில், சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டதன் அதிர்வலைகளே இன்னும் அடங்காத நிலையில் குவாஹாத்தி ஐஐடி யில் ஜப்பான் நாட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த கோட்டா அனோடா என்ற 23 வயது மாணவர், சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ், மூன்று மாத கால பயிற்சி படிப்பிற்காக கவுகாத்தி ஐ.ஐ.டியில் தங்கி படித்து வந்துள்ளார். கல்லூரி விடுதியில் தங்கி இருந்து படித்து வந்த இவர், தனது பயிற்சியை முடித்துக்கொண்டு வரும் 30 ஆம் தேதி மீண்டும் ஜப்பான் திரும்புவதாக இருந்தார். இந்த சூழலில் நேற்று பிற்பகல் வரை, இவர் தங்கியிருந்த விடுதி அறை திறக்கப்படாமலேயே இருந்துள்ளது.

கதவை தட்டிப்பார்த்தும் எந்தவித பதிலும் வராததால் சந்தேகமடைந்த அவரது நண்பர்கள் விடுதி நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்குவந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.