Skip to main content

கடன் பிரச்சனை; மனைவி, பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

father who poisoned his wife and children

 

கடலூர் மாவட்டம், புதுச்சத்திரம் காவல் சரகம், வாண்டையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ்(45). இவரது மனைவி பிரபாவதி(32). இந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சிதம்பரம் புறவழிச்சாலை, தாயம்மாள் நகரில் குடியிருந்து வருகின்றனர். கணேஷ் சிதம்பரம் பொய்யாப்பிள்ளைச்சாவடி பைபாஸ் அருகே வி.எஸ்.கே. என்ற பெயரில் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை வைத்துள்ளார். இவர் கடந்த 23-ம் தேதி இரவு வியாபாரத்தில் கடன் அதிகமாகி நஷ்டம் ஏற்பட்டதால் திராட்சை ஜூஸில் எலி பேஸ்ட்டை கலந்து மனைவி பிரபாவதி மற்றும் அவரது இரு பிள்ளைகளுக்கும் தெரியாமல் கொடுத்துள்ளார்.  

 

இதனையடுத்து, நேற்று (24.11.2022) காலை 11 மணியளவில் அனைவரும் வீட்டில் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததால் மனம் உடைந்த கணேஷ், புதுச்சத்திரம் அருகே அன்னப்பன்பேட்டை கிராமத்திற்குச் சென்று, பி.முட்லூரில் எம்ஜிஆர் சிலை அருகே உரக்கடை வைத்துள்ள அக்பர் அலி என்ற தனது நண்பருக்கு  வாட்ஸ்ஆப்பில் ஆடியோ ஒன்றினை அனுப்பி உள்ளார். அதில், தனக்கு வியாபாரத்தில் கடன் அதிகமாகி விட்டதாகவும், எனது சாவுக்கு சிவாயம் ஊராட்சி மன்றத் தலைவர் செங்குட்டுவன் (அதிமுக), தச்சம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் டி.எம்.ஆர். சகோதரர்கள் ஐவர் மற்றும் நாயுடுமங்கலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் ஆகியோர்தான் காரணம் என்று தெரிவித்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

 

கணேஷ் அனுப்பிய ஆடியோவைக் கேட்ட அக்பர் அலி, கணேஷின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் கவலைக்கிடமாக இருந்த மூன்று பேரையும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். கணேஷை தேடிச் சென்ற போது அன்னப்பன்பேட்டை அருகே ஒரு மரத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து கணேஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். எலி பேஸ்ட் சாப்பிட்ட மூவரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கணேஷ் தனது சட்டை பாக்கெட்டில், எனது மரணத்திற்குக் காரணம் சிவாயம் ஊராட்சி மன்றத் தலைவர் செங்குட்டுவன் மற்றும் தச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த  டி.எம்.ஆர். சகோதரர்கள் கிருஷ்ணமூர்த்தி, முருகன், ராஜா, கண்ணன், விஜயராகவன், நடராஜன்(பாஜக) மற்றும் நாயுடுமங்கலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்றும், தனக்கு பணம் தர வேண்டியவர்கள் விவரம் பற்றியும் குறிப்பிட்டு எழுதி வைத்திருந்தார். போலீசார் அதனைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.