Skip to main content

தந்தையிடம் சொத்தை பிடிங்கிக்கொண்டு வீதிக்கு அனுப்பிய மகன்: தீர்ப்பாயம் புகட்டிய பாடம்...

Published on 12/07/2019 | Edited on 13/07/2019

 

தந்தைக்கு சொந்தமான ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை தனது பெயருக்கு எழுதி வாங்கிக்கொண்ட மகன், தந்தை மற்றும் தாயை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனுக்கு சப்-கலெக்டர் தக்க பாடத்தை புகட்டியுள்ளார்.
 

புதுச்சேரி மாநிலம் வழுதாவூர் சாலையைச் சேர்ந்தவர் சங்கரதாஸ். கூலித் தொழிலாளியான இவர் தனது உழைப்பில் சிறுக சிறுக சேமித்து, ''ராமசாமி பத்மாவதி எஸ்.ராஜ்மோகன் இல்லம்'' என்ற பெயரில் கனவு வீட்டை கட்டியுள்ளார். இவருக்கு சிவகாமி என்ற மனைவியும், ராஜ் மோகன் என்ற மகனும், சபிதா என்ற மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அதனைத் தொடர்ந்து மகனுக்கும் காதல் திருமணத்தை செய்து வைத்தார். 


 

 

ஐ.டி.ஐ. படித்த தான் தொழில் தொடங்க வேண்டும் என்பதால், வங்கியில் கடன் பெற வீட்டு பத்திரம் வேண்டும் என்பதற்காக தன் பெயரில் வீட்டை எழுதி வைக்க வேண்டும் என்று மகன் ராஜ்மோகன் கூறியுள்ளார். இதனை நம்பிய சங்கரதாஸ், தன் பெயரில் இருந்த வீட்டை மகன் பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு எழுதி வைத்துள்ளார். 

 

sangaradoss


 

நாளடைவில் பெற்றோரை மதிக்காத மகன், இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். மனைவி சிவகாமியுடன் எங்கே செல்வது என்று தெரியாமல் அலைந்த சங்கரதாஸ், தனது மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மகளுக்கு பாரமாக இருக்க விரும்பாத சங்கரதாஸ் வேலை தேடி அலைந்தார். வேலை தேடி அலைந்த இடத்தில் தனது நிலைமையை கூறியுள்ளார். 
 

அப்போது சிலர் ஒரு வழக்கறிஞரை சந்தித்துப் பேசுங்கள் என்று கூறியுள்ளனர். இதையடுத்து வழக்கறிஞர் ஒருவரை சந்தித்த சங்கரதாஸ், தனது நிலைமைய எடுத்து கூறியுள்ளார். அந்த வழக்கறிஞர், புதுச்சேரியில் உள்ள முதியோர் பராமரிப்பு தீர்வு நடுவர் தீப்பாயத்தில் சங்கரதாஸ் - சிவகாமி தம்பதியினரை புகார் அளிக்க வைத்தார். 


 

 

இதையடுத்து ராஜ்மோகனை அழைத்த தீர்ப்பாய நடுவர், பெற்றோரை அழைத்து பாதுகாக்குமாறு கூறியுள்ளார். இதனை ராஜ்மோகன் ஏற்க மறுத்தார். இதையடுத்து ராஜ்மோகன் பெயரில் 1614 சதுர அடி பரப்பளவில் இருந்த வீட்டின் பத்திரத்தை ரத்து செய்த தீர்ப்பாயம், அந்த சொத்தை சங்கரதாஸ்க்கு திருப்பித் தர உத்தரவிட்டது. இந்த உத்தரவை சங்கரதாஸிடம் அளித்தார் சப்-கலெக்டர் சுதாகர். சார்பதிவாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கும் உத்தரவினை அனுப்பி வைத்தார். 
 



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.