Advertisment

மகனின் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக்கொண்ட தந்தை!

Father lost their due to son bizarre decision

Advertisment

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாண்டாம்பாளையம், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் நாகன்(48). தேங்காய் உரிக்கும் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு பகவதி(23) என்ற மகன் உள்ளார். பகவதி வாழை இலை வெட்டும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் தந்தை நாகனுக்கும், மகன் பகவதிக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இருவருக்கும் மது போதையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று(16.1.2025) இரவு தந்தை, மகன் இருவரும் மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் நாகன் வெளியே சென்று விட்டார். வீட்டில் இருந்த பகவதி திடீரென தூக்குப்போட்டு கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே பகவதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே, வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த நாகனிடம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ‘உங்கள் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்’ என்ற விவரத்தை கூறினர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நாகன் மகன் இறந்த சோகத்தில் அவரும் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் நாகனின் உடலும் பிரேதப் பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தையும், மகனும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Erode father
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe