Advertisment

முறையற்ற தொடர்பிற்காக தந்தை கொலை; ஜாமீனில் வெளிவந்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

nn

ராமநாதபுரம் மாவட்டம் காவனூர் ஆசாரிமடத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. திருமணமாகி இரண்டு குழந்தைகள் இவருக்கு உள்ளது. பவித்ரா இடையர்வலசை பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவருடன் முறையிட்ட தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பவித்ராவின் தாய் பாக்கியம் ஆதரவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisment

பவித்ராவின் கணவர் இதைத்தெரிந்து கொண்ட நிலையில் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து ஓட்டுநருடன் முறையற்ற தொடர்பிலிருந்த பவித்ராவை அவரது தந்தை ரவி அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.

Advertisment

கடந்தாண்டு மார்ச் மாதம் உறங்கிக் கொண்டிருந்த தந்தை ரவியை பவித்ராவும் அவரது தாய் பாக்கியமும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பவித்ரா, பாக்கியம் இருவரும் ஜாமீனில் வெளிவந்து குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கொத்தனார் ஒருவருடன் பவித்ராவிற்கு முறையற்ற தொடர்பு ஏற்பட்டது. பவித்ராவின் செயலால் மேலும் அதிர்ச்சி அடைந்த ரவியின் சகோதரர் மகன் மணி என்பவர் ஆத்திரமடைந்து நேற்று மாலை பவித்ரா தனியாக இருந்த நேரத்தில் இரும்புக் கம்பியால் அடித்து அவரை கொலை செய்துள்ளார்.

கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மணியை ஊர்மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பவித்ராவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe