Skip to main content

மகன் சடலத்தை பார்த்ததும் உயிரிழந்த தந்தை... வேறு வழி தெரியாமல் உண்மையை ஒப்புக்கொண்ட விவசாயி!!

Published on 15/06/2021 | Edited on 15/06/2021

  

Father who died when son saw corpse; The farmer who admitted the truth without knowing any other way

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது மேலந்தல் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் காசிநாதன் (30). விவசாயம் செய்துவந்த இவர் நேற்று முன்தினம் (13.06.2021) அதிகாலை தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கரும்புக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்றுள்ளார். அப்படி செல்லும்போது அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் அவரது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளி கிழங்கைக் காட்டு விலங்குகள் நோண்டி தின்பதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது என தனது மரவள்ளிக்கிழங்கு நிலத்தைச் சுற்றிலும் காட்டு விலங்குகளைத் தடுப்பதற்காக மின்சார வேலி அமைத்திருந்தார்.

 

இதுகுறித்து விபரம் அறியாத அப்பாவி காசிநாதன் அந்த வழியாக தனது வயலுக்குச் செல்லும்போது பாஸ்கரின் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். சிறிது நேரத்தில் தனது நிலத்திற்கு வந்த பாஸ்கர் தன் நிலத்தில் போடப்பட்ட மின்சார வேலியில் சிக்கி காசிநாதன் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை மறைப்பதற்காக காசிநாதன் சடலத்தைத் தூக்கிச் சென்று காசிநாதனின் கரும்பு தோட்டத்தில் போட்டுவிட்டு வந்துள்ளார். இதனால் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக காசிநாதன் சடலத்தின் மீது பூச்சி மருந்தும் தெளித்துள்ளார் பாஸ்கரன். அதன் பிறகு எதுவும் தெரியாதது போல்  வீட்டுக்குச் சென்றுவிட்டார். 

 

எப்படியும் காசிநாதன் இறந்தது வெளியே தெரியும். நம் மின்சார வேலியில் சிக்கி இறந்தார் என்பதைப் போலீசார் கண்டுபிடித்துவிட்டால் நாம் வேறு வழியில்லாமல் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலை வரும் என்று அவரது மனசாட்சி உறுத்தியது. இதனால் பயந்துபோன பாஸ்கர், மணலூர்பேட்டை காவல் நிலையம் சென்று சரணடைந்தார். காசிநாதன் தனது வயலில் அமைத்திருந்த மின்சார வேலியில் சிக்கி இறந்தது குறித்து விவரமாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் பாஸ்கர் அழைத்துச் சென்று காசிநாதன் கரும்பு தோட்டத்திற்கு அவரது சடலத்தைத் தேடி கைப்பற்றினார்கள். இந்த தகவல் அறிந்த காசிநாதனின் தந்தை சுப்பிரமணியம் தன் மகன் இறந்துபோன தகவல் கிடைத்ததும் மகன் சடலமாக கிடந்த கரும்பு தோட்டத்துக்கு ஓடி வந்துள்ளார். 

 

மகன் சடலமாக கிடப்பதைப் பார்த்த சுப்பிரமணியம் அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பதறிப்போன அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மகன் இறந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் தந்தை மாரடைப்பால் இறந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காசிநாதனின் தாய் ராஜாமணி மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். காட்டு விலங்குகளுக்கு அமைக்கப்படும் மின்சார வேலியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் வடமாவட்டங்களில் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டேதான் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.