Skip to main content

மின்னல் தாக்கி  தந்தை மகன் உயிரிழப்பு

Published on 27/09/2022 | Edited on 27/09/2022

 

Father and son passed away in lightning strike

 

வயலில் தேங்கிய தண்ணீரை வடிகட்ட சென்ற விவசயிகள் இடி மின்னல் தாக்கி பலியாகியுள்ள சம்பவம் மன்னார்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது. மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு மட்டும் 10 செ.மீ மழை பதிவாகியது.  

 

இந்நிலையில் மன்னார்குடியை அடுத்த முக்குளம் சாத்தனூர் தளிக்கோட்டை காலனி தெருவைச் சேர்ந்த விவசாயி அன்பரசன்(55), தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள தனது வயலில் நேரடி நெல் விதைப்பு செய்திருக்கிறார். நேற்று இரவு பெய்த கன மழையில் வயலில் தண்ணீர் தேங்கியிருக்கும் என அஞ்சி தனது மகன் அருள்முருகனை (27) அழைத்துக்கொண்டு வயலுக்கு விரைந்துள்ளார். 

 

Father and son passed away in lightning strike

 

அப்போது தனது வயலில் தேங்கியிருந்த தண்ணீரை வடியவைக்க வடிகாலில் தண்ணீரை வெட்டிவிட்டுக்கொண்டிருந்தபோது திடீரென இடியுடன் மின்னல் தாக்கியது.  இதில் சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உடல் கருகி பரிதாபமாக உயிரழந்தனர். இதனை அறிந்த அன்பரசன் மற்றும் அருள்முருகனின்  குடும்பத்தினர் நிலைகுலைந்தனர்.


இதுகுறித்து வடுவூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து உயிரழந்த இருவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். நள்ளிரவு என பார்க்காமல் வயலுக்கு சென்று பயிரை காப்பாற்றிட போராடிய தந்தை, மகன் மின்னல் தாக்கி உயிரழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியிலும், ஒட்டுமொத்த விவசாயிகள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

வரலாறு காணாத கனமழை; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Unprecedented heavy rains in california

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பொழிந்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. 

அதன்படி, கலிபோர்னியா பகுதியில் நேற்று (06-02-24) வரலாறு காணாத கனமழைக் கொட்டித் தீர்த்தது. இதில், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட சில இடங்களில் 25 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இந்த வெள்ளத்தின் போது பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் பலரும் அதில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மணிக்கு 78 மைல் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றால் கிட்டத்தட்ட 8,75,000 வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பு படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த மழை வெள்ளத்தால் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த வெள்ளம் குறித்து தேசிய வானிலை மையம் கூறியுள்ளதாவது, ‘5 முதல் 10 அங்குலங்கள் (12.7செ.மீ முதல் 25.4 செ.மீ) வரை பெய்துள்ளது. மேலும், இந்த மழையின் அளவு அதிகரிக்கக்கூடும்’ என்றும் தெரிவிக்கப்படுகின்றது.