மீன்பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும் ஆற்றில் மூழ்கி பலி! 

Father and son drown in river

திருச்சி, ராம்ஜி நகர் அருகே உள்ள ஊரைச் சேர்ந்த அன்புசெல்வம்(45), கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் ஹரிஹரன்(12). இவர்கள் இருவரும் நேற்று, கோரை ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஆழமான பகுதியில் சிக்கியுள்ளனர். நீண்ட நேரமாகியும் கணவரும், மகனும் வீடு திரும்பாததால், அவரது மனைவி சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் தேடியுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அவரது மனைவி, ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் கணவரையும், மகனையும் காணவில்லை என புகார் அளித்தார்.

அந்தப் புகாரின் பேரில் ராம்ஜி நகர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில் இருவரும் மீன் பிடிக்க கோரை ஆற்றுக்கு சென்றது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கோரை ஆற்றுப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அன்புசெல்வத்தின் சைக்கிள் கரையில் இருந்துள்ளது. இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கோரை ஆற்றினுள் தேடினர். அப்போது, அன்புசெல்வமும் அவரது மகன் ஹரிஹரனும் ஆற்றின் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர், இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ராம்ஜி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

river trichy
இதையும் படியுங்கள்
Subscribe