நீதிமன்றத்தின் வெளியே மகனை வெட்டி கொன்ற தந்தை! 

Father and had conflict son passed away police arrested his father

தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம்சுந்தரலிங்கநகரைச் சேர்ந்ததமிழழகன்என்பவர் நிலபுரோக்கர். இவரது மகன் காசிராஜன் (30) சொந்தமாகலாரிவைத்து தொழில் செய்பவர். இவரது மனைவியிடம் தந்தைதமிழழகன்தவறாக நடந்ததாக 2020ல் ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் வழக்காகி, தற்போது தூத்துக்குடிமகிளாகோர்ட்டில்வழக்கு நடந்து வருகிறது.

இந்த விவகாரம்காரணமாகதந்தை மகனுக்குள் பகைமை மூண்டிருக்கிறது. அடிக்கடி காசிராஜன் தன்தந்தையைத்தாக்கமுயன்றிருக்கிறார். இதன் காரணமாகதமிழழகன்மகன்காசிராஜனுக்குசொத்துக்களைதரவில்லை. இந்நிலையில் கடந்தஏப். 10ம் தேதியன்று காசிராஜனின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சூழலில்மகிளாகோர்ட்டில்நடந்து வருகிற வழக்கின் பொருட்டுஆஜராகுவதற்காகதமிழழகன்தன் உறவினர்களானகடல்ராஜா, மற்றும்காசிதுரைஆகியோருடன்நேற்று தூத்துக்குடிகோர்ட்டிற்குவந்திருக்கிறார். தாங்கள் வந்த காரைகோர்ட்எதிரேயுள்ளதெருவில் நிறுத்தியுள்ளனர்.

Father and had conflict son passed away police arrested his father

பின்புகோர்ட்டில்ஆஐராகிவிட்டுவீடு திரும்புவதற்காககாரில்ஏற முயன்ற தந்தைதமிழழகனைகாசிராஜன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்ற போது அவர்கள்வாகனத்தால்காசிராஜன் மீது மோதி விட்டுத் தப்பிச் செல்ல முயன்றனர். உடனே சுதாரித்த, காசிராஜன் தந்தைதமிழழகனைவெட்டியிருக்கிறார். பதறிப் போய் தடுத்த உறவினர்கள்காசிதுரைக்கும்கடல்ராஜாவிற்கும்அரிவாள் வெட்டு விழுந்தது.

அடுத்த நொடி சுதாரித்துக் கொண்ட மூன்று பேரும்காசிராஜனைத்திருப்பித்தாக்கினர். அவரை தெருவில் விரட்டிச் சென்ற மூன்று பேரும் தாக்கினர். காசிராஜன் கையிலிருந்த அரிவாளைப் பறித்தவர்கள் அவரைப் பட்டப்பகல் வீதியில் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார் காசிராஜன். பட்டப் பகலில் நடந்த இந்த பயங்கரத்தால் பொது மக்கள் அலறிச் சிதறிஓடினார்கள்.

தமிழழகன்உட்படகாயமடைந்தமூன்று பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த எஸ்.பி.பாலஜிசரவணன், ஏ.எஸ்.பி.சந்தீஸ்,மத்தியபாகம்இன்ஸ்பெக்டர்ஜெயபிரகாஷ்உள்ளிட்டபோலீசார்விசாரணை நடத்தியதோடு உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். அத்துடன் பதிவு செய்யப்பட்ட வழக்கில்,மகனைகொலைசெய்ததாகதந்தைதமிழழகன், உறவினர்களான கடல் ராஜாகாசிதுரைமூவரையும் கைது செய்தபோலீசார்மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில்நீதிமன்றம்பகுதியில் நடந்த இந்தப் பயங்கரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

police Tuticorin
இதையும் படியுங்கள்
Subscribe