Skip to main content

நீதிமன்றத்தின் வெளியே மகனை வெட்டி கொன்ற தந்தை! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Father and had conflict son passed away police arrested his father
காசிராஜன்

 

தூத்துக்குடி மாவட்டத்தின் ஒட்டப்பிடாரம் சுந்தரலிங்க நகரைச் சேர்ந்த தமிழழகன் என்பவர் நில புரோக்கர். இவரது மகன் காசிராஜன் (30) சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்பவர். இவரது மனைவியிடம் தந்தை தமிழழகன் தவறாக நடந்ததாக 2020ல் ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் வழக்காகி, தற்போது தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

 

இந்த விவகாரம் காரணமாக தந்தை மகனுக்குள் பகைமை மூண்டிருக்கிறது. அடிக்கடி காசிராஜன் தன் தந்தையைத் தாக்க முயன்றிருக்கிறார். இதன் காரணமாக தமிழழகன் மகன் காசிராஜனுக்கு சொத்துக்களை தரவில்லை. இந்நிலையில் கடந்த ஏப். 10ம் தேதியன்று காசிராஜனின் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சூழலில் மகிளா கோர்ட்டில் நடந்து வருகிற வழக்கின் பொருட்டு ஆஜராகுவதற்காக தமிழழகன் தன் உறவினர்களான கடல்ராஜா, மற்றும் காசிதுரை ஆகியோருடன் நேற்று தூத்துக்குடி கோர்ட்டிற்கு வந்திருக்கிறார். தாங்கள் வந்த காரை கோர்ட் எதிரேயுள்ள தெருவில் நிறுத்தியுள்ளனர்.

 

Father and had conflict son passed away police arrested his father
தமிழழகன்

 

பின்பு கோர்ட்டில் ஆஐராகிவிட்டு வீடு திரும்புவதற்காக காரில் ஏற முயன்ற தந்தை தமிழழகனை காசிராஜன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்ற போது அவர்கள் வாகனத்தால் காசிராஜன் மீது மோதி விட்டுத் தப்பிச் செல்ல முயன்றனர். உடனே சுதாரித்த, காசிராஜன் தந்தை தமிழழகனை வெட்டியிருக்கிறார். பதறிப் போய் தடுத்த உறவினர்கள் காசிதுரைக்கும் கடல்ராஜாவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.


அடுத்த நொடி சுதாரித்துக் கொண்ட மூன்று பேரும் காசிராஜனைத் திருப்பித்தாக்கினர். அவரை தெருவில் விரட்டிச் சென்ற மூன்று பேரும் தாக்கினர். காசிராஜன் கையிலிருந்த அரிவாளைப் பறித்தவர்கள் அவரைப் பட்டப்பகல் வீதியில் சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார் காசிராஜன். பட்டப் பகலில் நடந்த இந்த பயங்கரத்தால் பொது மக்கள் அலறிச் சிதறி ஓடினார்கள்.


தமிழழகன் உட்பட காயமடைந்த மூன்று பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த எஸ்.பி.பாலஜி சரவணன், ஏ.எஸ்.பி. சந்தீஸ், மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தியதோடு உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். அத்துடன் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மகனை கொலை செய்ததாக தந்தை தமிழழகன், உறவினர்களான கடல் ராஜா காசிதுரை மூவரையும் கைது செய்த போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பட்டப்பகலில் நீதிமன்றம் பகுதியில் நடந்த இந்தப் பயங்கரம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.