Skip to main content

ஆறாவது நாளாக உண்ணாவிரதம்; காவல் துணை ஆணையர் பேச்சுவார்த்தை (படங்கள்)

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி வழங்க கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் ஆறாவது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இரவில் மொபைல் டார்ச் லைட் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் குடும்பத்தினருடன் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அதே சமயம் டிபிஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுடன் காவல்துறை துணை ஆணையர் சேகர் தேஷ்முக் போராட்டத்தை கைவிடும் படி பேச்சுவார்த்தை நடத்தினார். 

 

 

சார்ந்த செய்திகள்