Skip to main content

குடிமராமத்து பணிகளை விவசாயிகள் வரவேற்கிறார்கள்! - ககன்தீப்சிங்பேடி

Published on 13/07/2018 | Edited on 13/07/2018

தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணி மற்றும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்வதற்கு தமிழக அரசின் முதன்மை செயலாளரும் வேளாண்மை துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நடைபெற்று வரும் பணிகளை நேற்று கடலூரில் பார்வையிட்டார்.
 

 

 

இதனை தொடர்ந்து காலையில் கடலூர் அருகே கம்மியம் பேட்டை பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் கரையை பலப்படுத்தும் பணி, குறிஞ்சிபாடி, மிராளுர், கல்குணம், நந்திமங்கலம், கொடிப்பள்ளம், நஞ்சமகத்து வாழ்க்கை உள்ளிட்ட பகுதிகளில் நடக்கும் குடிமராமத்து பணிகள் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதனை ஆய்வு செய்ய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களுக்கு என்னை நியமித்து உள்ளனர். முதல் கட்டமாக கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்து வருகிறேன். மாவட்டத்தில் வெள்ள தடுப்பு பணிக்காக ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
 

இதில் கெடிலம் ஆற்றில் இருபுறமும் நிரந்தரமாக கரையை பலபடுத்தும் பணி, சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடலூர் நகரில் உள்ள கெடிலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் போது வெள்ளம் ஊருக்கு புகாமல் நிரந்தரமாக தடுக்கப்படும். மாவட்டத்தில் பரவனாறு, செங்கால் ஓடை, பழைய கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, வெலிங்டன் ஏரி, வீராணம் ஏரி, ஆகிய ஏரிகளில் தமிழக அரசு மற்றும் என்.எல்.சி. நிறுவனமும் இணைந்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
 

 

 

இதுவரை 20 சதமான மராமத்து மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகள் நடந்துள்ளது. பணிகளை விவசாயிகளே செய்வதால் நல்லமுறையில் உள்ளது. விவசாயிகளும் இதனை வரவேற்றுள்ளனர். பல இடங்களில் விவசாயிகளின் ஆலோசனைகளை கேட்டு செயல்படுத்தி வருகிறோம். நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை பார்க்கும் விவசாயிகள் அவங்க ஊரில் உள்ள குளங்களையும், முக்கிய நீர் தேக்கத்தை குடிமராமத்து திட்டத்தில் பணிகளை செய்யுங்கள் என்று கூறுகிறார்கள்.

 

 


இதனை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தூர்வாரப்பட்ட வாய்கால்களில் ஆகாய தாமரை செடிகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது. இதனை அழிக்க கேமிக்கல் பொருட்களை பயன்படுத்த முடியாது. அதனால் அழிக்க காலதாமதம் ஆகிறது. விரைவில் செடிகளை முழுவதும் அழிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
  

இவருடன் மாவட்ட ஆட்சியர் தண்டபாணி, மாவட்ட வருவாய் அதிகாரி விஜயா, சப்- கலெக்டர் சரயூ, சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், வட்டாட்சியர் அமுதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அன்பரசு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.