வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை ஊராட்சி நன்னேரி பகுதியை சேர்ந்தவர் சி.கே.தனபால் (82). இவர் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில் அக்டோபர் 14 ந்தேதி இரவு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இவருக்கு மனைவி வசந்தா, மகன் குயில்தாசன், மகள் மணிமொழி உள்ளனர். இறந்த சி.கே.தனபால் உடலுக்கு பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.