FARMERS TRICHY UNION GOVENRMENT AND MEKADATHU DAM

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள ரவுண்டானா பகுதியில் விவசாயிகள் நேற்று (10/08/2021) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

அப்போது, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; தச்சங்குறிச்சி பகுதியிலுள்ள செட்டி ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாசன வாய்க்கால்களில் தனிநபர் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்; லால்குடி பகுதியில் உள்ள வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் தங்கள் கைகளில் மண்டை ஓடுகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Advertisment