Skip to main content

“இத்திட்டத்தின் மூலம் மூன்று மாவட்ட விவசாயிகள் பயனடைய தொடங்கியுள்ளனர்” - இ. பெரியசாமி!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

"Farmers in three districts have started benefiting from this scheme" -E.Periyasamy

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே விருவீடு பகுதியில் 58 கால்வாயினை சிமெண்ட் கால்வாயாக மாற்றும் திட்டம் குறித்த ஆய்வினை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி மேற்கொண்டார். தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் விதமாக கலைஞர் அரசால் கொண்டுவரப்பட்ட 58 கால்வாய் திட்டத்தின் மூலம் தற்போது திண்டுக்கல் மாவட்டம்  வத்தலகுண்டு ஒன்றியப் பகுதியிலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கும் தற்போது தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது.

 

பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் தந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக 58 கால்வாயினை தற்போது சிமெண்ட் கால்வாயாக மாற்றும் திட்டத்தினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னெடுத்து தீவிரப்படுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாக வத்தலக்குண்டு ஒன்றிய பகுதியில் உள்ள 58ஆம் கால்வாயினைக் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.  

 

"Farmers in three districts have started benefiting from this scheme" -E.Periyasamy

 

அதன்பின் பத்திரிகையாளர்களிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் இ. பெரியசாமி பேசும்போது, “கலைஞரின் பொற்கால ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் தற்போது மூன்று மாவட்ட விவசாயிகள் பயனடைய தொடங்கியுள்ளனர். இப்போது உள்ள கால்வாயில் பல இடங்களில் தண்ணீர் கசிவு இருப்பதால் அதனை சீர்படுத்தும் விதமாக தமிழக முதல்வர் அவர்கள் பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் அறிவித்தது போல் 58ஆம் கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றும் திட்டத்தினை செயல்படுத்த உள்ளார்.

 

அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது வத்தலக்குண்டு ஒன்றிய பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்னும் சில தினங்களில் உசிலம்பட்டி பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்று கூறினார். மேலும், விராலிமாயன்பட்டி, ஆலங்குளம் கண்மாய், வத்தல்பட்டி, சேரன்குளம் கண்மாய்க்கு நேரடி நீர்ப்பாசனம் வருவதற்கான புதிய நீர்வழிப் பாதை ஏற்படுத்தித் தருமாறு அப்பகுதி விவசாயிகள் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த ஆய்வின்போது வத்தலக்குண்டு ஒன்றியக்குழு தலைவர் பரமேஸ்வரி, ஒன்றியச் செயலாளர் முருகன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட விவசாயிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்