Skip to main content

பாலை கீழே கொட்டி விவசாயிகள் போராட்டம்... 

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

Milk purchase issue

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ளது வீ.கூட்ரோடு. இங்கு தனியாருக்குச் சொந்தமான பால்பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பால் பண்ணைக்கு கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து தினசரி பாலை கொள்முதல் செய்து இங்கு கொண்டு வருகின்றனர். 

 

கொள்முதல் செய்யப்படும் அந்தப் பாலுக்கு உண்டான பணத்தை மாதம் மூன்று முறை வழங்கி வருவதாகவும் இதனால் பால் பண்ணைக்குத் தினசரி சுமார் இரண்டு லட்சம் லிட்டர் பால் வரத்து தொடர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் சில தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பால் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. திடீரென பால் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தப் பண்ணைக்கு பால் உற்பத்தி செய்து கொண்டு வந்த விவசாயிகளின் இரண்டு லட்சம் லிட்டர் பால் வீணானது. இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோஷமிட்டனர். செம்பளா குறிச்சி கைகாட்டி அருகே சுமார் 100 லிட்டர் பாலை கீழே கொட்டி போராட்டம் செய்தனர்.

 

இதையடுத்து கீழ்குப்பம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை  சாமிநாதன் உள்ளிட்ட போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உங்களது கோரிக்கை பற்றி அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து, பால் உற்பத்தியாளர்கள் கலைந்து சென்றனர். அதேபோல் சின்னசேலம் அருகே கனியாமூர் மற்றும் அதன் சுற்றுவட்டார விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாலை தொடர்ந்து கொள்முதல் செய்யக்கோரி நான்குமுனை சந்திப்பில் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

 

இதுகுறித்து தகவலறிந்த சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பால் கொள்முதல் செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து பால் உற்பத்தியாளர்கள் கலைந்து சென்றனர். சின்னசேலம் பகுதியில் பால் கொள்முதல் செய்வதைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஏமாற்றிய வடமாநில இளைஞர்; தர்ம அடி கொடுத்த பொது மக்கள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Two people were arrested for deceiving people by claiming were applying jewelry polish

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பழைய வெள்ளி, தங்கம், கண்ணாடி பொருட்கள், ஆகியவற்றிற்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறி கிராம மக்களை நம்ப வைத்துள்ளனர். அப்போது ஒரிஜினல் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களிடம் வாங்கிய அந்த பீகார் இளைஞர்கள் பாலிஷ் போட்டு கொடுத்துள்ளனர்.

இதை பயன்படுத்திக் கொண்டு அந்த பீகார் இளைஞர்கள் ஒரிஜினல் நகைகளை பாலிஷ் போடுவதாக வாங்கிக் மறைத்து வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான நகை மற்றும் பொருட்களை திருப்பிக் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் ஊர்மக்களுக்கு தெரியவர இருவரையும் பிடித்து தர்ம அடிகொடுத்து நயினார்பாளையம் வி.ஏ.ஓவுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வி.ஏ.ஓ ரஞ்சித் குமார் பீகார் இளைஞர்களிடம் விசாரணை நடத்தினார். 

விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்புகுமார்(31), அமர குமார் யாதவ்(34) இருவரும் தான் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாலிஷ் போட வைத்திருந்த உபகரண பொருட்களுடன் இருவரையும் கீழ்குப்பம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.