Skip to main content

நாகையில் அறைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது

Published on 16/05/2018 | Edited on 16/05/2018
nagai

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து , நாகையில் மேலாடைகளை களைந்து  300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலில் இறங்கி தற்கொலை போராட்டத்திற்கு சென்று கைதாகினர்.

 

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று 15 ம் தேதி நாகையில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

ஆர்ப்பாட்டத்தில், 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்திய அரசை கண்டித்து, கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட ஊர்வலமாக செல்ல தயாராகினர்.  போலீசார் அனுமதி மறுக்க, ஆவேசமடைந்த விவசாயிகள் திடீர் என மேலாடைகளை களைந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை வலுகட்டாயமாக கைது செய்தனர். 

 

அப்போது போராட்டக் காரர்களுக்கும், போலீசாருக்கு மிடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டதால், அங்கு பெரும் பாபரப்பு நிலவியது. பின்னர் மேலாடைகளை களைந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 300 க்கும் மேற்பட்டோரை குண்டுகட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர். விவசாயிகளின் தற்கொலை போராட்டம் காரணமாக முன்னதாக நாகை கடற்கரையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். 

 

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக முதல்வரை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை கேட்டு பெறுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.