Skip to main content

ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம்: ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவிப்பு

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Farmers Front announced that it will hold a struggle in front of the Governor House

 

ஆளுநர் மாளிகை முன்பு நவ.26,27,28 தேதிகளில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறிவித்துள்ளது.

 

சிதம்பரத்தில் பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் விடுதியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில பொதுக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ.சண்முகம் தலைமை வகித்தார். விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர்  பசுமைவளவன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 

 

கூட்டத்தில் மாநிலத் தலைவர் சண்முகம் பங்கேற்று பேசுகையில், மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து  டெல்லி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ள 30 ஆளுநர் மாளிகை முன்பு அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும், ஐக்கிய விவசாயி முன்னணி சங்கங்கள் தலைமையிலான அனைத்து விவசாய சங்கங்களும், தொழிலாளர்களும் இணைந்து மிகப் பெரிய தொடர் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

 

அதனடிப்படையில் நவ. 26, 27 ,28 ஆகிய மூன்று நாட்கள் இந்தியா முழுவதும் உள்ள அந்தந்த மாநிலங்களின் ஆளுநர் மாளிகை முன்பு மிகப்பெரிய அளவில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். தமிழகத்தில் ஆளுநர் மாளிகை முன்பு இந்த காத்திருப்பு போராட்டம் நடத்த காவல் துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளோம். 3 நாட்களும் பகல் மற்றும் இரவு முழுவதும் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. 

 

அனைத்து மாவட்டங்களிலிருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம் என்றார். முன்னதாக வாச்சாத்தி வழக்கில் தொடர்ந்து போராடி வெற்றி கண்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் பெ. சண்முகத்திற்கு விவசாய சங்க தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் சங்க மாநில செயலாளர் மாசிலாமணி, மாவட்ட செயலாளர் சரவணன்  உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.