Skip to main content

மோசமான சூழல் ஏற்பட்டதால் வாழ வழி தெரியாமல் இருக்கும் விவசாயிகள்..!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

Farmers who do not know the way to live due to bad conditions

 

நிலத்தை உழவுசெய்து, பண்படுத்தி, நீர்பாய்ச்சி, செடிகளுக்கு உரமிட்டு, பூச்சித் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து, இரவு பகல் பாராமல் அதைப் பராமரித்து அறுவடை செய்யும்போது வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தங்கள் வீட்டு மாடுகளைவிட்டு மேயவைத்த விவசாயிகளின் நிலை கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள மன்னார்குடி.பு, மாம்பாக்கம், உளுந்து ஆண்டார்கோவில், பாண்டூர் உட்பட  பத்துக்கும் மேற்பட்ட அப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள், தங்கள் வயல்களில் ஆண்டுதோறும் இதுபோன்ற சீசனில் வெண்டை விவசாயம் செய்துவருகின்றனர். 

 

தற்போது வெண்டைக்காய் அறுவடை சமயம். ஆனால், வெண்டைக்காய் வாங்குவதற்கு வியாபாரிகள் முன்வரவில்லை. காரணம், இந்தக் கரோனா நோய் பரவல். கரோனா நோய் பரவல் காரணமாக காய்கறி சந்தைகள் முழு நேரமும் செயல்படவில்லை. காய்கறி மார்க்கெட்டுகளில் மதியம் 12 மணிவரை மட்டுமே விற்பனை என்ற நிலை. மினி டெம்போக்களில் காய்கறிகளை வாங்கிச் சென்று, கிராமம், நகரம் என தெருத்தெருவாக விற்பனை செய்துவந்த சிறு வியாபாரிகள், லாக்டவுன் காரணமாக அவர்களது வாகனங்கள் செல்வது தடுக்கப்படுவதால் அவர்களும் வாங்க வரவில்லை. 

 

Farmers who do not know the way to live due to bad conditions

 

சாகுபடி செய்த வெண்டைக்காய்களை விவசாயிகளே காய்கறி மார்க்கெட்டுக்கு எடுத்துச்சென்று வியாபாரிகளிடம் கொடுத்தாலும், எங்களுக்கு வியாபாரம் இல்லை, உங்களிடம் இருந்து வாங்கி நாங்கள் யாரிடம் விற்பது என்று வாங்க மறுக்கிறார்கள். இதனால் மனம் நொந்துபோன விவசாயிகள், வேறு வழியில்லாமல் தாங்கள் பாடுபட்டு கண்விழித்து நீர்பாய்ச்சி விளையவைத்த வெண்டை செடி வயல்களில் தங்களது மாடுகளைவிட்டு மேய்க்கிறார்கள். விவசாயிகளின் நிலை காலம் காலமாக இதே அவலத்தில்தான் உள்ளது.

 

“பயிர் செய்துள்ள காய்கறிகளைக் கொள்முதல் செய்து, குளிரூட்டப்பட்ட குடோன்களில் பாதுகாப்பாக வைத்து. விளைச்சல் இல்லாத நேரங்களில் அவற்றை விற்பனை செய்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும்” என்கிறார்கள் விவசாயிகள். “‘உப்பு விக்க போனா மழை கொட்டுகிறது, மாவு விக்க போனா சூறாவளி காற்று வீசுகிறது,’ இந்த நிலையில்தான் விவசாயிகளான எங்களின் நிலை உள்ளது. தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்கள் இப்படிப்பட்ட எங்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்” என்கிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.