Skip to main content

சிறப்பு காப்பீடு திட்டத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும்;விவசாயிகள் கோரிக்கை

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் 17 ஆம் தேதி வேளாண்மை தொடர்பான மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற உள்ளது. அந்த விவாதத்தில் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் என அனைவரது குடும்பமும் ஒரு விவசாயியோ அல்லது விவசாயக் கூலித்தொழிலாளரோ விபத்தில் சிக்கி உடல் ஊனமோ  அல்லது உயிரிழப்போ ஏற்படின் அவர்களது குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து விடும் சூழல் உள்ளது. எனவே அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகிறது. எனவே தான் இந்நிலையைப் போக்க ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும் வகையில் சிறப்பு காப்பீடுத் திட்டம் கொண்டுவரப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Farmers demand special insurance scheme- Farmers demand!


இந்த திட்டம் ஒன்றே விவசாயிகளுக்கு நம்பிக்கையையும் தொடர்ந்து விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் நம்மைக் காக்க அரசு இருக்கிறது என்ற பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும். எனவே இலாபகரமான நியாயமான விலை கிடைக்கவும் அடிப்படை ஆதார விலையினை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும். எளிதில் அழுகக்கூடிய பொருளான தக்காளி உள்ளிட்ட பொருட்களில் பழச்சாறு தயாரித்து விவசாயிகளுக்கு உதவிட அரசு நீரா பானத்துக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்தில் இதற்கும் வழங்க வேண்டும். 

சிக்கிம் மாநிலம் போல் தமிழகத்தை முழு அளவில் இரசாயனமற்ற இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இரசாயன பூச்சிக் கொல்லிகள் இல்லாத ஆரோக்கியமான இயற்கை வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருட்களை மருந்து பயன்படுத்தாத காய்கறிகளை உற்பத்தி செய்து நோயற்ற சமுதாயத்தை உருவாக்க தமிழக முதல்வர் அவர்கள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.