Skip to main content

பொதுமக்கள் மத்தியில் விவசாய சங்க தலைவரை தாக்கிய காவல்துறை; கண்டித்த அழகிரி!!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

farmer union leader attacked by police, alagiri condemned

 

காட்டுமன்னார்கோவில் வீரனந்தபுரம் பகுதியில், சாலை விரிவாக்கப் பணிக்காக வீடுகளை அகற்றுவது சம்பந்தமாக, பாதிக்கப்பட்ட ஏழைமக்களுக்கு ஆதரவாக வீடுகளைக் காலி செய்ய ஒரு மாதம் அவகாசம் வேண்டும் என மக்களுக்குக் குரல் கொடுத்த காங்கிரஸ் பிரமுகரும், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான இளங்கீரனுக்கும், காட்டுமன்னார்கோவில் காவல்துறைக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

இதில் இளங்கீரனை காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ரவுடியைப் பிடித்து இழுப்பது போல் இழுத்து, தாக்கி வண்டியில் ஏற்றினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட இளங்கீரன் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது அங்கேயே மயக்கம் போட்டு விழுந்துள்ளார். பின்னர் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்து விசாரனை செய்து வருகிறார்கள். ஏழை மக்களுக்காகக் குரல் கொடுத்த விவசாய சங்கத் தலைவரை, பொதுமக்கள் மத்தியில் ரவுடியை இழுத்து செல்வது போல் இழுத்துச்சென்ற காவல்துறையின் செயல்பாடு அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

farmer union leader attacked by police, alagiri condemned

 

ஏழை மக்களுக்காகப் போராடுபவர்களுக்கு இதுதான் நிலமையா? என்று அப்பகுதியில் உள்ளவர்கள் வேதனைக் குரல் எழுப்புகிரார்கள். கடந்த பொங்கல் தினத்தன்று சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் விவசாய சங்கத்தலைவருடன் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடிய போது, கடலூர் மாவட்டத்தில் இருந்து இவரும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடதக்கது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழுகிரி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன் அவர்கள் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக விவசாயிகளுக்காக போராடி வருபவர்.

 

ஒரு பொது நோக்கிற்காக அவர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்காக பணிந்து பேசும்போது காட்டுமன்னார்கோயில் காவல்துறை அதிகாரிகள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். பொது வாழ்க்கையில் இருப்பவர், விவசாய சங்கத் தலைவர், ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர், பொதுநோக்கிற்காக சென்றவரை காவல்துறை அதிகாரிகள் கைநீட்டி அடிப்பது என்பது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த தவறான செயலை உடனடியாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்தப் பகுதி விவசாயிகளும், காங்கிரஸ் கட்சியும் அவருக்கு ஆதரவாகப் போராடும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.