Skip to main content

தவணைத் தொகை கட்டாததற்கு அவமானப்படுத்தியதால் விவசாயி தற்கொலை!!

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள டி.மடிவாராயனூரை சேர்ந்த செல்வம் மகன் 30 வயது பாலாஜி, இவர் தனியாக விவசாயம் செய்து வருகிறார். அதற்கு உதவியாக விழுப்புரத்தில் உள்ள மகேந்திரா டிராக்டர் கம்பெனியில் 9 மாதங்களுக்கு முன்பு 6.50 லட்சம் மதிப்பில் புது டிராக்டர் வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார். தவணை முறையில் செலுத்த சொல்லி மகேந்திரா பைனாஸ் கம்பெனி கடன் பெற்று தந்துள்ளது .

 

former suicide in viluppuram

 

அதன்படி பாலாஜி மாதம் தோறும் 5ம் தேதிக்குள் தவறாமல் தவணை செலுத்தி வந்துள்ளார். இந்த மாதம் தவணை கட்ட முடியவில்லை இதனை அறிந்து பைனாஸ் கம்பெனி மேலாளர் மற்றும் ஊழியர்கள் பாலாஜி வீட்டுக்கு நேற்றுக்கு படையெடுத்தனர். தவணை பணத்தை இன்றே கட்ட வேண்டும் என்று தகராறு செய்தனர். பாலாஜி குடும்பத்தினர் அந்த ஊழியர்களிடம் கெஞ்சினார்கள். சில நாட்கள் அவகாசம் கேட்டனர் முடியாது என கூறிய ஊழியர்கள் டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்து செல்ல முயன்றனர்.

 

இந்த பரபரப்பான சம்பவத்தை ஊர் மக்கள் வேடிக்கை பார்த்தனர் இதனால் பாலாஜிக்கு அவமானமாகிவிட்டது. அப்போது அவரது சித்தப்பா பாபு பாலாஜி கட்ட வேண்டிய தவணை தொகையை கம்பெனி ஊழியர்களிடம் கொடுத்து நிலமையை சமாளித்துள்ளார். இதனால் அவமானம் மன வேதனையடைந்த அவர்  ஒரு தவணை தொகை பாக்கிக்காக ஈவு இரக்கமில்லாமல் நடந்து கொண்ட கம்பெனியினர் செயளால்  மனமுடைந்து நேற்று மாலையே விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

former suicide in viluppuram

 

விபரமறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.  ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பாலாஜி பரிதாபமாக இறந்து போனார். இதனை கேள்விப்பட்ட அப்பகுதி விவசாயிகள் மகேந்திரா கம்பெனியின் இரக்கமற்ற செயலால் ஒரு விவசாயியின் உயிர் பரிக்கப்பட்டுள்ளது, இதை சும்மா விட மாட்டோம் என போராட்டத்தில் இறங்க உள்ளனர்.  இதற்கு ஆளும் எடப்பாடி அரசு என்ன பதில் சொல்லப் போகிறது பார்ப்போம்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் டிஜிபி மீதான பாலியல் வழக்கு; நாளை தீர்ப்பு

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
case against former DGP; Judgment tomorrow

தமிழக சிறப்பு டி.ஜி.பி பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பியை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடிக்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. பின்னர் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 16/06/2023 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஜனவரி 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் தீர்ப்பளிக்க இருக்கிறார்.

Next Story

முன்னாள் டிஜிபி மீது வழக்குப்பதிவு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Case registered against former DGP

 

தமிழக முதல்வர் பற்றிய அவதூறு கருத்துக்களை பரப்பியதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் சொல்லாத கருத்துகளை சொல்லியதாக அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியினர் திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

 

அந்த புகாரில் 'இந்துகள் வாக்கு வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக பொய் செய்தியை நடராஜன் வாட்ஸப் அப் குழுக்களில் பரப்பியதாகவும், முதல்வர் கூறாத ஒன்றை கூறியதாக அவதூறு பரப்பும் அவர் மீது நடவடிக்கை என கூறப்பட்டது. இந்நிலையில், முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.