Skip to main content

எட்டாவது ஆண்டாக பொய்த்த குறுவை சாகுபடி; கதவணைகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கும்மியடித்து போராட்டம்!

Published on 12/06/2019 | Edited on 12/06/2019

டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு ஜீன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம் ஆனால் இன்றோடு எட்டாவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு சாவுமணி அடித்துள்ளது மத்திய, மாநில அரசும், கர்நாடக அரசும். மேட்டூர் அணையை ஜீன் 12 ம் தேதி திறக்காத அவலத்தை வெளிப்படுத்தும் வகையில் நாகை மாவட்ட விவசாயிகள் உடைந்த கதவணைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், பெண்கள் கும்மியடித்து ஒப்பாரிவைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

 

protest



எட்டு ஆண்டுகளுக்கு முன்புவரை சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் விளைந்த டெல்டா மாவட்ட விவசாயநிலங்கள் தற்போது ஒருபோகத்திற்கே தண்ணீர் இன்றி வறண்டுக் கிடக்கிறது. கடந்த 8 ஆண்டுகளாக காவிரி நீர் முறையாக வந்து சேராததாலும், பருவகாலத்தில் மழைநீரை ஒருசேர நீராதாரத்தை பெருக்க வழியற்றுப்போனதாலும் விவசாயம் முற்றிலும் பொய்த்துப் போனது. கடும் வறட்சியினால் கடைமடை பகுதியான நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டாவது காவிரி நீர் கிடைக்கும் என்கிற எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வழக்கம் போல் மேட்டூர் அணை எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் திறக்கப்படவில்லை. கர்நாடகாவிடம் பெரவேண்டிய தண்ணீரையும் பெறமுடியாத நிலையில் அதிமுக அரசு உட்கட்சி பூசலில் உழண்டுக்கொண்டிருக்கிறது. இதனால் 2.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடியை தொடங்க முடியாமல் நாகை விவசாயிகள் தவித்து வருகின்றனர். 

 

 

protest



இந்நிலையில் தண்ணீர் திறக்காமல் அலட்சியம் காட்டிய தமிழக அரசை கண்டித்தும், தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் விளைவித்து வரும் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டித்து நாகை மாவட்டம் திருக்குவளை, மடப்புரம், ஆகிய கிராம மக்கள் உடைந்த கதவணைக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி அரசுகளுக்கு தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

 



மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் "கர்நாடக அரசிடம் தமிழக அரசு உடனே பேசி தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை விரைந்து பெற்றுத்தர வலியுறுத்த வேண்டும்," என்றனர். மேலும் அங்கிருந்த விவசாயிகள் மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காத கர்நாடகா அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதோடு, துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் 100 க்கும் மேற்பட்ட  பெண்கள் ஒப்பாரி வைத்தும், கும்மியடித்தும்,  நூதனமான முறையில்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

protest



அங்கிருந்த விவசாயி ஒருவர் கூறுகையில், "  எங்களுக்கு வாழ்வாதாரமான காவிரி நீரை வழங்காமல் தொடர்ந்து தமிழகம் வஞ்சிக்கபடுகிறது. ஆணையத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடகா அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள கூடிய சூழல் ஏற்பட்டுவிட்டது. பஞ்சம் பிழைக்க  விவசாய பணிகளை விட்டு ஹோட்டல் வேலைக்கும், சித்தால் வேலைக்கும் போகும் நிலையாகிவிட்டது. எங்களின் நிலமையை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்." என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.