Skip to main content

விவசாயி கொலை; தலைமறைவான மூவரைத் தேடும் காவல்துறை  

Published on 29/07/2022 | Edited on 29/07/2022

 

Farmer passed away police searching for three

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகில் உள்ள குறிஞ்சிபை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(60). இவர், அதே ஊரில் உள்ள ராமர் கோவிலுக்கு சொந்தமான மானிய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். தற்போது, அவர் நேற்று காலை அந்த நிலத்தில் மீண்டும் விவசாயம் செய்வதற்காக டிராக்டர் கொண்டு உழவு பணியை செய்துகொண்டிருந்தார். 

 

அப்போது அவரது உறவினரும் பக்கத்து நிலத்தை சேர்ந்தவருமான தர்மராஜ்(75) என்பவர், தன் நிலத்தை ஒட்டி ரங்கநாதன் உழவு செய்வதாக கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது அவர்களுக்கிடையே கை கலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ரங்கநாதன், அவரது மனைவிகள் வசந்தா(50), பிருந்தா(48) ஆகிய மூவரும் சேர்ந்து தர்மராஜனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து தர்மராஜன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

 

இந்தத் தகவல் அறிந்த ரங்கநாதன் அவரது மனைவிகள் ஆகிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர். தர்மராஜன் இறந்த தகவல் அவரது மகன் சக்கரவர்த்திக்கு தெரியவந்ததை அடுத்து, உடனடியாக தந்தை கொலை செய்யப்பட்டது குறிச்சி செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி, இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், தர்மராஜன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


இந்த கொலை தொடர்பாக ரங்கநாதன் அவரது மனைவிகள் வசந்தா, பிருந்தா ஆகிய மூவர் மீதும் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.