மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி 70க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் 75 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. உலக பிரபலங்களின் ஆதரவால் விவசாயிகள் போராட்டம் சர்வேதச அளவில் கவனம் பெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கரும்பு அறுவடை செய்ய பணம் இல்லாததால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்யாறு அருகே உள்ள முளகிரிபட்டு கிராமத்தில் கரும்பு விவசாயியான ராஜாங்கம் (வயது 35) விளைவித்த கரும்பை அறுவடை செய்ய பணமில்லாததால் மனமுடைந்த நிலையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.