Skip to main content

கால்நடை திருடனை பிடித்துக்கொடுத்த விவசாயி: 'கூர்வாள்' பரிசு கொடுத்த ஜமீன்!

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

150 ஆண்டுகளுக்கு முன்பாக கந்தர்வகோட்டை ஜமீன் நிர்வாகத்திற்குட்பட்ட காட்டுநாவல் கிராம விவசாயி நல்லபெருமாள் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மாடு திருட்டில் ஈடுபட்ட திருட்டுக்கும்பலின் தலைவனை விரட்டிப்பிடித்து பொதுமக்களின் உதவியோடு கந்தர்வகோட்டை ஜமீன்தாரரிடம் ஒப்படைத்த செய்தியை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் சு.சக்திமகேஸ்வரன், ர.ஜனார்த்தனன் ஆவணப்படுத்தியுள்ளனர். இந்த மாணவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் இராமச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

 

 

 Farmer caught by cattle thief: Zameen gandharvakottai, pudukkottai

 

இது குறித்து கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் கூறியதாவது, எமது பள்ளியில் மாணவர்களுக்கு நாட்டின் பழமையான பண்பாட்டு சின்னங்களான கல்வெட்டுகள், சிற்பங்கள், சுவடிகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்களை பாதுகாப்பது குறித்து கண்காட்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் பங்குபெற்ற தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் பழங்கால வீட்டு உபயோகப்பொருட்கள், ஓலைச்சுவடிகள், பழமையான நாணயங்கள் மற்றும் கல்வெட்டுகளை அடையாளம் கண்டு தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட கல்வெட்டுகள் ஆய்வில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர்கள் சக்தி மகேஸ்வரன், ஜனார்த்தனன் ஆகியோர் மாணவர் சக்தி மகேஸ்வரன் வீட்டில் கூர்வாள் ஒன்று இருப்பதாகவும், அதனை ஆவணப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து உரிய தகவல்களை திரட்டிவர அறிவுறுத்தப்பட்டது. 

 


இந்த கூர்வாள் ஜமீன் தாரால் பரிசு வழங்கப்பட்டதன் பின்னணி குறித்த வாய்மொழித்தகவல்களை மாணவர்கள் திரட்டியதில் பல ருசிகரமான தகவல்கள் வெளிப்பட்டது. கந்தர்வகோட்டை ஜமீன் எல்லைக்குட்பட்ட கிராம மக்கள் பல ஆண்டுகளாக திருடர்களின் அட்டூழியத்தால் தமது பொன் பொருட்களையும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளையும் இழந்ததோடு, திருடர்கள் பயத்தால் மக்கள் இரவில் தூக்கமின்றி அவதிப் பட்டு வந்துள்ளனர்‌. இதனைத்தொடர்ந்து கந்தர்வகோட்டை ஜமீன் நிர்வாகம் ஒரு உத்தரவை பிறப்பித்தது அதன்படி திருடர்களை பிடித்துக்கொடுப்பவருக்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்பதுதான் அது. ஆனால் இந்த தகவல் குறித்து நல்லபெருமாள் அறிந்திருக்கவில்லை என்றாலும், ஊர்மக்களின் நலனை காக்க வேண்டும் என்பதற்காக பயங்கர ஆயுதங்களுடன் வந்த திருட்டுக்கும்பலை தன் கையில் வைத்திருந்த சிறு சிலம்பக்கம்பினை வைத்து உயிரை பற்றி கவலைப்படாமல் திருட்டுக்கும்பலை விரட்டியடித்தோடு அக்கும்பலின் தலைவனை கட்டிப்புரண்டு கடைசியில் அவனது கைகால்களை கட்டிப்போட்டார்.

 

 Farmer caught by cattle thief: Zameen gandharvakottai, pudukkottai

 

இந்த சம்பவத்தின் போது ஏற்பட்ட இரைச்சலால் விழித்துக்கொண்ட கிராம மக்கள் அங்கே கூடினர். மேலும் தீப்பந்தங்களுடன் சென்று அன்றிரவே அவனை கந்தர்வகோட்டை அரண்மனையில் ஜமீனிடம் ஒப்படைத்தனர். நீண்ட நாட்களாக மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த திருட்டுக்கும்பலை தனி ஆளாக பிடித்த காட்டுநாவல் கிராம விவசாயி நல்லபெருமாளுக்கு பண்டாரத்தார் வம்சாவழி ஜமீன்தாரர் மாலை சூடி பாராட்டியதோடு விவசாயிக்கு நெல் உள்ளிட்ட உணவுப்பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் வழங்கியதோடு கூர்வாள் ஒன்றையும் பரிசளித்து பாராட்டியுள்ளதாக மாணவர்கள் திரட்டிய தகவல் மூலம் தனிமனிதர் சமூகத்திற்கு எவ்வாறு பயனாக அமைய முடியும் என்பதை அறிய முடிகிறது என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.