ஓசூர் அருகே காட்டு யானையை விவசாயி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வனத்துறை கைது செய்துள்ளது.
ஓசூர் ஜவளிகிரி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியை சேர்ந்தவர் விவசாயி முதுமல்லேஷ். இவர் தனது விவசாய தோட்டத்தில் ராகி பயிரிட்டிருந்த நிலையில் காட்டு யானை ஒன்று வந்து அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அதிருப்தியில் இருந்த விவசாயி முதுமல்லேஷ், மீண்டும் தோட்டத்திற்கு வந்த காட்டு யானையை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். வனத்துறை நடத்திய விசாரணையில், தான்தான் யானையை சுட்டுக்கொன்றதாக விவசாயி முதுமல்லேஷ் வாக்குமூலம் கொடுத்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.